உடனடிச்செய்திகள்

Thursday, April 12, 2018

காவல்துறையின் வன்மம்!

காவல்துறையின் வன்மம்!
 காவிரி உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்தத் தமிழ்நாடே வேதனையிலும், கொந்தளிப்பிலும் உள்ள சூழலில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (11.04.2018) சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழகக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இயக்குநர் வெற்றிமாறன் காவல்துறையினரால் தாக்கப்படுவதைத் தடுக்கப் போன இடத்தில், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியமும், அவரது அமைப்பின் கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் இரமேசும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை கண்மூடித்தனமாக அடித்ததில், தோழர் களஞ்சியத்துக்கு கைவிரல் உடைந்துள்ளது. இதயப்பகுதி அருகிலும், நெஞ்சிலும் காவலர்களின் லட்டி அடித்து, இரத்தம் கட்டிக் கொண்டுள்ளது. தோழர் இரமேசுக்கு விலா எலும்பு உடைந்து, நுரையீரலில் காற்று புகுந்து மிகவும் ஆபத்தான சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

தற்போது, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இருவரையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், இன்று (12.04.2018) பிற்பகலில் நேரில் சென்று பார்த்து, அவர்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் இளவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மண்ணின் உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT