உடனடிச்செய்திகள்

Wednesday, March 6, 2013

“ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்” - புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!


ஆந்திர மதுக்கான் நிறுவனத்தை விரட்டியடிப்போம்
புதுக்குடி ஆர்ப்பாட்டத்தில் சூளுரை!


திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடிவளம்பக்குடிதிருமலைசத்திரம் உள்ளிட்டகிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தராத ஆந்திர மதுக்கான் நிறுவனத்தைக் கண்டித்தும்அதற்கு துணை போகும் இந்திய அரசுதேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்தும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் நேற்று (05.03.2013) புதுக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று பேசிய தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் .காமராசுபுதுக்குடி பேருந்துநிறுத்தத்தில் மதுக்கான் நிறுவனத்தால் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும் கூட அவை கடந்த ஓராண்டிற்கும் மேலாக எரியாத நிலையில்,இருட்டில் சாலையை கடந்து இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதையும்பலர் உடல் அங்கங்களை இழந்தது குறித்தும்ஆதாரங்களுடன் பேசினார்.

தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் தோழர் .தேவதாசு பேசும் போதுஇங்கே போடப்பட்டுள்ள விளக்குகள் ஓராண்டாகஎரியவில்லையென்றால் எதற்காக மின்கம்பங்களை நட்டிருக்கீறீர்கள் எனக் கேட்டார்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சைமாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு பேசும் போதுமதுக்கான் நிறுவனத்திடம் கையூட்டுப் பெறுகின்ற காவல்துறை அதிகாரிகளுக்குகடுமையான எச்சரிக்கை விடுத்தார்

தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன் பேசும் போதுஇவ்வார்ப்பாட்டம் ஓர் எச்சரிக்கை தான் என்றும்,அடுத்துமதுக்கான் நிறுவன அலுவலகத்தை மக்களைத் திரட்டிச் சென்று முற்றுகையிடுவோம் என்றும் பலத்த கரவொலிக்கிடையேஅறிவித்தார்.

.தே.பொ.தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை பேசும் போதுஇந்திய அரசின் தமிழின விரோதச் செயல்களையும்,மதுக்கடைகளை வைத்து தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழிக்கும் தமிழக அரசையும்இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் ஏற்படுகின்றவிபத்துகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதிமகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மீனா,மேலத்திருவிழாப்பட்டி ..முசெயலாளர் தோழர்  .கணேசன் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்துபேசிய தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் .அருணபாரதிஇந்திய அரசு நெடுஞ்சாலைகளை தனியாரிடம்விற்றுவிட்டதையும்அத்தனியார் நிறுவனங்கள் கிராம மக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அடிப்படை வசதிகளைக் கூட செய்துத் தரமறுப்பதையும் எடுத்துரைத்தார்.

இவ்வார்ப்பாட்டத்தில்புதுக்குடிவளம்பக்குடிநரிகுறவன்பட்டிசெங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.









(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT