உடனடிச்செய்திகள்

Thursday, May 22, 2008

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை :: த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது


:: மண்ணின் மைந்தர்களுக்கே வேலை ::

த.தே.பொ.க. மறியல் :: 160 பேர் கைது


திருச்சி, மே 20: திருச்சி "பெல்' நிறுவனத்தில் 80 சதம் தமிழர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி நடத்திய மறியலில் 35 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.


திருச்சி "பெல்' ஆலை வாயிலை நோக்கி சுமார் 300 பேர் பேரணியாக எழுச்சியுடன் மறியலுக்குச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அனைவரும் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.


மறியலுக்கு போராட்டக் குழுத் தலைவர் தோழர் குழ. பால்ராசு தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் தோழர் பெ. மணியரசன் மறியலைத் தொடங்கி வைத்தார்.


மதிமுக சொத்துப் பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவர் வேங்கூர் புலவர் க. முருகேசன் வாழ்த்திப் பேசினார்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச்செயலர் நா. வைகறை, கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி மாவட்டத் தலைவர் கவித்துவன், செயலர் ராஜா ரகுநாதன் உள்ளிட்டோர் மறியலில் கலந்து கொண்டனர். முன்னதாக மறியலுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இம்மறியலில் தமிழக முழுவதுமிருந்து த.தே.பொ.க. தோழர்கள் திரளாக கலந்து கொண்டனா.

"பெல்' ஆலை மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆலைகளிலும் ஆள்களைத் தேர்வு செய்யும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT