உடனடிச்செய்திகள்

Monday, October 13, 2008

இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இன்று (13-10-2008)

சிங்களன் பங்காளி; தமிழன் பகையாளியா?
இந்திய அரசைக் கண்டித்து

ஆர்ப்பாட்டம்

இடம் : மெமோரியல் அரங்கு, சென்னை.
காலம் : இன்று - 13-10-2008, திங்கள், மாலை 4 மணி

இந்திய அரசே...

சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத்தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்கவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்!

ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு, உடை, மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத்தடை போட்டாய்!

இந்திய அரசே..
சிங்களப் படைக்;குப் போர்க்கப்பல், நவீனப்படைக்கருவிகள், ரேடார் கருவிகள், வெடிமருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கவும் 256 படைத்துறையினரை அனுப்பி உள்ளாய்!

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!

சிங்களன் உனக்குப் பங்காளி; தமிழன் உனக்குப் பகையாளியா?

இப்பொழுது, வன்னிப்பகுதியில் சிங்கள அரசு விமானக்குண்டு வீச்சு நடத்தி அன்றாடம் தமிழர்களை இனப்படுகொலை செய்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும்; உயிர்காக்க வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவுக்குள் 6 1/2, கோடி தமிழர்கள் இருந்தும், ஈழத்தில் உள்ள 35 லட்சம் தமிழர்களைப் பாதுகாக்க முடியவில்லை.
கேட்க நாதியற்ற இனமாகத் தமிழ் இனம் தவிக்கிறது.
இளைஞர்களே, இனியும் ஏமாற வேண்டாம்,
வீறுகொண்டு எழுங்கள்; வீதிக்கு வாருங்கள்;
-------------------------------------------------------------------------------
கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
இந்திய அரசே
  • 1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திரும்பப் பெறு
  • 2. சிங்களபடைக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையினர் அனைவரையும் திரும்ப அழை.
  • 3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப்படையினர்க்கும காவல்துறையினர்க்கும் பயிற்சி கொடுக்காதே.
  • 4. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல், பொருளியல், படைவகை உதவி எதுவம் செய்யாதே!
-------------------------------------------------------------------------------
தலைமை:
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
-------------------------------------------------------------------------------
முன்னிலை
தோழர் தியாகு,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
-------------------------------------------------------------------------------
தோழர் விடுதலை இராசேந்திரன்,
பொதுச் செயலாளர்,
பெரியார் திராவிடர் கழகம்.
-------------------------------------------------------------------------------
கண்டன உரை
தோழர் சி.மகேந்திரன்,
இணைச் செயலாளர்,
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி.
தோழர் சோழ நம்பியார்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்,
தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி
இயக்குனர் சீமான்
தமிழ்த் திரை இயக்குனர்
எழுத்தாளர் ஓவியா
மற்றும் பல தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
-------------------------------------------------------------------------------
இவண்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,
பெரியார் திராவிடர் கழகம்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT