உடனடிச்செய்திகள்

Tuesday, September 4, 2012

கடும் மின்வெட்டை நீக்க, நெய்வேலி மின்சாரம் முழுவதையும் பெற வலியுறுத்தி சிதம்பரத்தில் அனைத்து தொழில், வணிகம் சார்ந்த அமைப்புகள் பேரணி ஆர்ப்பாட்டம்



கடுமையான, தாறுமாறான, முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டினால் சிதம்பரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயங்கிவரும் வணிக நிறுவனங்களும், சிறுதொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக் கிடையில் நிறுவனங்களை நடத்தி வரும் சிதம்பரம் பகுதி வணிகர்களும், தொழில் முனைவோரும் இந்த மின்வெட்டால் விழிபிதுங்கி நிற்கிறனர் இந்நிலையில், நெய்வேலி மின்சாரம் முழுவதையும் பெற வலியுறுத்தி 4.9.2012 இன்று காலை 10 அளவில் சிதம்பரம் அனைத்து தொழில் வணிகம் சார்ந்த அமைப்புகள், பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரம், தெற்கு சன்னதியிலிருந்து புறப்பட்ட பெருந்திரளான வணிகர்களின் பேரணி “ தமிழக அரசே ! தமிழக அரசே! கடுமையான மின்வெட்டை நீக்க ,நெய்வேலி மின்சாரத்தை முழுவதையும் கேட்டுப்பெறு! கேட்டுப்பெறு! ”என்று உணர்ச்சி முழக்கமிட்டபடி பேரணியாக சென்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் திரு டி.டி.கே பாண்டியன் தலைமை தாங்கினார். பவுன், வெள்ளி, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு இரா. முத்துக்குமரேசன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

திரு ஆர். ஆர் ரவீந்தரன் (செயலாளர், காய், கனி மார்கெட் வியாபாரிகள் சங்கம்) ஆர். அருள் (தலைவர், அண்ணாமலைநகர், வர்த்தகர் சங்கம்) ஜி. சேகர் (தலைவர், தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம்), க. நாகராசஜன் (தலைவர், தமிழ்நாடு தையல் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கம்), கே.ரமேஷ் (தலைவர், புகைப்பட கலைஞர்கள், சங்கம்), ஆ.ஆறுமுகம் (மாவட்டச் செயலாளர், தமிழக உழவர் முன்னணி), பொன். சக்திவேல்(மாவட்டச் செயலாளர், அகில இந்திய கைவினைஞர் சங்கம்), செல்வ. கதிரவன் (சிதம்பரம் செயலாளர், கிரில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்), ஆ.குபேரன் (ஒருங்கிணைப்பாளர், அக்னி சிறகுகள் சேவை அமைப்பு), க.முரளி (தலைவர், கடலூர் மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்). ஆர். சுரேஷ் (தலைவர், சிதம்பரம் கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம்), அ.குணசேகரன் (சிதம்பரம், கவரிங் மிஷின் கட்டிங் தொழிலாளர்கள் சங்கம்), கோ. சுப்பராயன் (அமைப்புக்குழு, சிறுதொழில் அமைப்பு), இராதகிருஷ்ணன் (ஆலோசகர், பருப்பு, தானிய வியாபாரிகள் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு கி.வெங்கட் ராமன் பல்வேறு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். திரு. கு.சிவப்பிரகாசம் (சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் அமைப்பு) நன்றி நவின்றார்.

பெருந்திரளான பல்வேறு தொழில், வணிகம் சார்ந்த அமைப்புகளும், வணிகர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடித்து, சிதம்பரம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.






(செய்தி : த.தே.பொ.க.செய்தி பிரிவு , படங்கள் : அரவிந்தன்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT