உடனடிச்செய்திகள்

Friday, November 6, 2015

உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது! - தோழர் பெ. மணியரசன் இரங்கல்

உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவரும் என்னுடைய நீண்டநாள் தோழருமான முனைவர் அரணமுறுவல் அவர்கள்இன்று (06.11.2015),நெல்லையில் திடீரென்று மாரடைப்பால் காலமான செய்தியறிந்துசொல்லொண்ணா அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.

அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி..எல்படித்துக் கொண்டிருந்தபோதுதிருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத்தமிழ்க் கழக அமைப்பு மாநாட்டிற்கு வந்திருந்தார்அங்கு அவரை சந்தித்தது முதல்தோழர் அரணமுறுவல் அவர்களும் நானும் உலகத்தமிழ்க் கழகத்தில் பணியாற்றபோதும்அதன்பிறகு கடந்த 01.11.2015 அன்றுதேவக்கோட்டையில் தமிழர் முன்னணி நடத்தியதமிழர் தாயகநாள் விழாவில் கலந்து கொண்டது வரை தொடர்ந்துகொள்கை வழி உடன்பட்டு தோழமையோடு செயல்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை நிலைநாட்டிடதமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டும்இயங்கியும் வந்துள்ளோம்.

தோழர் அரணமுறுவல் இளமைக் காலம் தொட்டுமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்வழிநின்றுஉறுதியான தனித்தமிழ்ப் பற்று கொண்டுஅதனை தன் குடும்பத்திலும் பொது வெளியிலும் பரப்பிபணியாற்றி வந்ததுடன்தனித்தமிழ்நாடு கொள்கையிலும் உறுதியாக நின்றவர்அதைப்போலவேமனித சமத்துவம் தமிழர் சமத்துவம் பெண்ணுரிமை மதசார்பின்மை போன்ற கொள்கைகளிலும் உறுதியாக இருந்தவர்.

பாவாணர் பெருஞ்சித்திரனார் ஆகியோர் நிறுவிய உலகத் தமிழ்க் கழகம் இடையில் தொய்வடைந்துசெயல் முடங்கியிருந்தகாலத்தில் அதனை தூக்கி நிறுத்திசெயல் களத்திற்குக் கொண்டுவந்தோரில்தோழர் அரணமுறுவல் முதன்மையானவர்உலகத் தமிழ்க்கழகத்தின் சார்பில்தரமான ஆய்வுகளுடன்கூடியதனித்தமிழ் இதழாக “முதன்மொழியைகொண்டு வருவதிலும்அரணமுறுவல் பணிஅளப்பரியதுசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவர் ஆற்றியப் பணி மற்றவர்களாலும் மதிக்கத்தக்கதாக இருந்தது.

தமிழ் மொழிதமிழர் தாயகம்தமிழினம் ஆகியவை பல்வேறு தாக்குதலுக்கும்உரிமைப் பறிப்புகளுக்கும்உயிர் பறிப்புகளுக்கும்உள்ளாகி வரும் இவ்வேளையில்தோழர் அரணமுறுவல் இழப்பு என்பதுதமிழினத்திற்குப் பேரிழப்பாகும்பெரும் துன்பம் தருவதாகும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில்முனைவர் அரணமுறுவல் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்அவர்மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்


இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.


இடம் : சென்னை 

குறிப்பு: நாளை (07.11.2015) காலை 11 மணியளவில், மேற்கு தாம்பரம் முடிச்சூர் பகுதியிலுள்ள அய்யா அவர்களின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT