உடனடிச்செய்திகள்

Friday, May 25, 2018

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப்  பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு! தலைமைச் செயலக முற்றுகைப்போர்!

#Bansterlite
#NoInvestToVedanta
#ThoothukudiGunFire

தமிழ்நாட்டின் “ஜாலியன் வாலாபாக்” ஆகிவிட்ட தூத்துக்குடிக்கு, தமிழ்நாடு காவல்துறை மனித வேட்டையைக் கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பதவி விலக வலியுறுத்தியும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.05.2018) மாலை தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.




தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பல்வேறு கட்சி - இயக்கத் தலைவர்களும் தோழர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். சென்னை அண்ணா சிலை அருகிலிருந்து திரண்ட தோழர்களை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை - பறக்கும் தொடர்வண்டி பாலம் அருகில் காவல்துறையினர் வழிமறித்துத் கைது செய்தனர்.





தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், திரு. ஆளூர் சானவாஸ் (விடுதலைச் சிறுத்தைகள்), திரு. பெ. ஜான்பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்), தோழர் பிரவீன் (மே பதினேழு இயக்கம்), வழக்கறிஞர் இரசினிகாந்த் (மக்கள் அரசுக் கட்சி), முனைவர் சுப. உதயகுமார் (பச்சைத் தமிழகம்), திரு. பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாயிகள் சங்கம்), தோழர் கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), தோழர் செந்தமிழ்க்குமரன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), தோழர் பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் (தமிழர் முன்னணி) உள்ளிட்ட பல்வேறு கட்சி - இயக்கப் பொறுப்பாளர்களும் தோழர்களும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை இயக்குநர்கள் வெ. சேகர், அமீர், இராம், கோபி நயினார் உள்ளிட்ட திரைத்துறையினர் பங்கேற்றனர்.








கட்சிக் கொடி அடையாளங்களின்றி இப்போராட்டத்தில் தமிழ்தேசியப் பேரியக்கம் பங்கேற்றது. பேரியக்கம் சார்பில் பங்கேற்ற, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர்கள் மா.வே. சுகுமார், மணி, முத்துக்குமார் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.





தமிழ்நாடு அரசே!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு!

கொலைகாரக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

எடப்பாடியே பதவி விலகு!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT