ஈழத்தமிழர்களுக்காக தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
கடந்த ஆண்டு மே மாதம் சிங்கள இந்திய அரசுகள் தமிழீழ மக்கள் மீது தாக்குதல் தொடுத்த, பல்லாயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியில் கொன்றொழித்ததை நினைவு கூறும் விதமாக, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் ஒன்றை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்வின் போதே, சிலை திறப்பு நிகழ்வையும் இணைந்து மே 16 அன்று நடத்த ஏற்பாடானது. இதற்காக காவல்துறையினரிடம் முறையான அனுமதியும் பெறப்பட்டிருந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் உணர்வாளர்களிடம் முத்துக்குமாருக்கு முதல் சிலை நிறுவும் நிகழ்வுக்கு ஆதரவு குவிந்தது. பல்வேறு இடங்களிலும் இந்நிகழ்வுக்கான அறிவிப்புகள் சிறப்புற செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நிகழ்ச்சி நடக்கவிருக்கும் முன்தினம்(15.05.2010) அன்று சிலை திறப்புக்கு காவல்துறையினர் திடீர் தடை விதித்தனர். அதன் பின், மாணவர்கள் இளைஞர்கள் சுடரேந்தி வரும் சுடரோட்டம் நிகழ்வுக்கு, நிகழ்ச்சி நடக்கவிருந்த 16.5.2010 அன்று காலை அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. மேடையில் முத்துக்குமார் சிலையை வைப்பதற்கும் காவல்துறை தடை விதித்தது.
நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் இடையறாத பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பும் கூட காவல்துறை தனது நிலையை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டது.
வீரவணக்கப் பொதுக் கூட்டம்
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தஞ்சை வந்திருந்த உணர்வாளர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட, முள்ளிவாய்க்கால் வீரவணக்கப் பொதுக் கூட்டம் மட்டும் எழுச்சியுடள் நடத்தப்பட்டது. இளந்தமிழர் இயக்கத்தினர் உணர்வாளர்களை வரவேற்று ஆங்காங்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்திருந்தனர்.
எழுச்சித் தமிழிசை
புதுவைச் சித்தன் செயமூர்த்தி குழுவினரின் எழுச்சித் தமிழிசையுடன் தொடங்கிய வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, காவல்துறையினரின் அடாவடிப் போக்கைக் கடுமையாகச் சாடினார். முத்துக்குமார் சிலையை நிறுவ சட்ட முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அறிவித்தார்.
புலவர் கலியபெருமாள் சிலை திறப்பு
புலவர் கலியபெருமாள் சிலை திறப்பு
தமிழ்நாட்டு விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கரூர் ஓவியர் பரணர் தீட்டிய புலவரின் முழு உருவ ஓவியப் படத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து திறந்து வைத்துப் பேசினார்.
வீட்டுக்கு வீடு முத்துக்குமார் சிலை
வீட்டுக்கு வீடு முத்துக்குமார் சிலை
அதன் பின் மேடை ஏறிய, இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன், “முத்துக்குமாருக்கு ஒரு சிலை அல்ல, ஓராயிரம் சிலைகளை நாங்கள் நிறுவுவோம். கையடக்கமுள்ள முத்துக்குமார் சிலைகளை இளந்தமிழர் இயக்கம் தானே தயாரித்து, உணர்வாளர்களிடம் பரப்பும். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, தம் சொந்த இடத்தில் இச்சிலை நிறுவப்படும். இதனை யார் தடுக்க முடியும்?” என்று பேசினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwVlKa8hIinsC_0ILm_S0tsRMLcQeF8bVlKtMC33PiuW2uDraHc4qDs__ffhTjNJRKkqql5kO5mrmcU7v4EKjMCOWv9g6tWRDksoVU5jEFSbdXT2fWkTVCQEzYse3BMtGj08QiVmbRbquo/s320/10.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQp6GTE9IwQ7lcmnEo19EY5ohHrCJ26rbUjT8d8tx2OKMwyVWpOUHn16gg4HxEBDlVIvPLIBkZLClVdhrPg6G0UFUdF_owTDZcwKz4piaSPHOtUM2tRIvh2FQbbP0IQysxjtGFR0lBY4CF/s320/11.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqeS9ARDo7fnEv5axLk1XyZy7pHNNB3MtIuO4HobpX2gdJBugL4pTWv1zRpAFlJhrsgTqkiHCL24aWD52YRprY4zWCpZqP3iEO9sa0gmMQwvCQ0iM3u5M37yGWi1wgvhChT_-lW9g-jvK1/s320/9.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ6QD-FHtavfKPDyoo2nkJftF2lMKeElitpocIEiLmfZri_F2_8h_CH2TTYLtnAjMT6LjmXA823BeeZlIrZCUzLsEN98xQJ7_cyYvflfreSuF4rZWKKFLkmdw17QLgM8OL_YOT5d2Tvodo/s320/7.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtiIoqWNAAMJuKXDZ9XymJpKh89PtC5GvJJCukd7zLnGnKULQYhiMBbTHYt2qJB4WKLi1lc2NcoaMa2b3hZx7lNytRcAACuk9qS7gckgqGoopUBDD2JMQPK5W3TAhyqewVqJca130cjMKE/s320/5.jpg)
(இயக்குநர் ராம் பேசுகிறார்...)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCH5P08Plx-oonZIVp1e2QPGmFhIQD19DSISSeMwFxU4GIG7ZCSm_iTOiL6zO8Ml6wmfWoo0dVu3SY43GeIynLP0IPW-kE21ymQiwtU2c-2K4TL_rnnVw-YqizbDcJKpua4CNaGpCG6ucG/s320/2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHmVUHID-y-h5hNPE9nSPsoNjaPX5-eHROKMkVPMFfd6kue_-zqoSkKQ416eoz3kW8-OTS_SPpj6LFny8J5xCzpMGZ8qS0KYto1ALi1c-g3sxEKYVaGfhu6lXblim0wGt2CwUm80iaI8UC/s320/1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPcSzFDffJrf7HNGg0XDPJD64cEyUVCVavFsJjXLRmGc0JJGiBmNX4YJWMkuJ1MD08u6ZQBgvzQf4jpLo2BnnrdGJ4WV1OUKlRlcAWehLRPxK7Zon8rxMu7VJP83i5rziJ2Wkck4AY1Fl_/s320/4.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ3XH2xEIGk7xsvuLY8_LVKhWoEg_laAIfM_6dkb0WRnATb3SUd_R47CvHlRSV2TxuqO4AbXBHSKzQK843-My1CP7vUYqzGIqFs-kL9xxj69zsCKQlrnY7o7xMtDOND5vgY5kemU2o1MMb/s320/6.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPPwnHcLziIy8g_4Z6j0cMBrAtZFGuripH6Z_XxQYAy-5Srg40fOChKafcJ2KqC8aekxxgQK1eHetsOa8T0b5Fxt93Q7JS9p6PMIjsVE44PBhS88pMN8VurlfrJudMYoZYRRxStWKabm4o/s320/8.jpg)
ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு குமரேசன் வருகை தந்து சிறப்புரையாற்றினார். அதன் பின், மகளிர் ஆயத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, முன்னாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் ராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.
Post a Comment