உடனடிச்செய்திகள்

Monday, April 22, 2013

பேராசிரியர் புல்லரை விடுவிக்க வேண்டும்!

 பேராசிரியர் புல்லரை விடுவிக்க வேண்டும்!
பஞ்சாப்பில் சீக்கிய இன உரிமைகளுக்காகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்தபேராசிரியர் புல்லார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கிலிடமுனைந்துள்ள இந்திய அரசைக் கண்டித்தும்பேராசிரியர் புல்லாரை விடுவிக்கக் கோரியும் நேற்று(21.04.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில்உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தைபேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணிபொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திருகுணங்குடி அனீபா.தி.மு.வெளியீட்டுப்பிரிவுச் செயலாளர் திருவந்தியத்தேவன்நாம் தமிழர் கட்சியின் தோழர் ராஜன்இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர் உமர்கயான்மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திருஅதியமான்உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.






தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரைவழங்கினார்சென்னை சீக்கிய இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த திருபேஜ்தீப் சிங் உள்ளிட்ட சீக்கிய இனத் தலைவர்களும்இளைஞர்களும் இதில்பங்கேற்றனர்.

மாலைவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருதொல்.திருமாவளவன் பழரசம் அளித்து உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்தார்நிகழ்வைமரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருசெல்வராஜ் முருகையன்தோழர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.




இப்போராட்டத்தில்தமிழின உணர்வாளர்களும்மனித நேயர் ஆர்வலர்களும் மட்டுமின்றிசீக்கிய இன இளைஞர்களும் பங்கேற்றனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT