உடனடிச்செய்திகள்

Wednesday, October 5, 2016

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் . . . இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு - ஆர்ப்பாட்டம்!



கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் . . .
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி
உருவபொம்மையை எரிப்பு - ஆர்ப்பாட்டம்! 


கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள இந்திய அரசைக் கண்டித்து, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில், இன்று (04.10.2016) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் கு. மாசிலாமணி தலைமையில் ஒன்றுதிரண்ட தோழர்கள், இந்திய அரசுக்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப்பியவாறு, நரேந்திரமோடியின் உருவபொம்மையை எரித்து - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை, மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் வித்தியா, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி. பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிமாறன், மனிதநேயப் பேரவை திரு. பஞ்சநாதன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT