உடனடிச்செய்திகள்

Friday, June 30, 2017

வெறியாட்டம்!

வெறியாட்டம்!
கதிராமங்கலத்தில் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் எரிவளிக் கழகமான ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய்களில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலில், அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது காவல்துறையினர் வன்முறை ஏவி, மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்ட 13 பேர் மீது கொடுந்தாக்குதல் நடத்தி, காவல்துறையினர் கைது செய்து, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். அவர்களது தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை அவர்களும், ஊர் பொதுமக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஊரில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT