உடனடிச்செய்திகள்

Friday, October 20, 2017

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் நகரங்களில் தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் தமிழ்த் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்தெறிந்து, தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடக் கூடாது, தமிழர்கள் அடக்கத்துடன் நடக்காவிடில், 1991-இல் பெங்களூரில் நிகழ்ந்த காவிரி கலவரத்தை போல் மீண்டும் தமிழர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள செய்தி, இன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
 
தமிழர்களைத் தாக்கிய கன்னட இனவெறியர்களைக் கண்டித்து, இன்று (20.10.2017) மாலை 5 மணிக்கு சென்னை நுங்கமபாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் இதில் பங்கேற்கின்றனர். 
 
தமிழின உணர்வாளர்களும், ஆர்வலர்களும் இதில் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 
வாருங்கள் தமிழர்களே! 
 
தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT