உடனடிச்செய்திகள்

Tuesday, October 10, 2017

செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
செண்பகவல்லி தடுப்பணையை தமிழ்நாடு அரசு உடனடியாக சீர்செய்திட நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக் கோரியும் செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு சார்பில் நேற்று (9.10.2017) மாலை வாசுசுதேவநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாசுசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, செண்பகவல்லி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்கழு உறுப்பினருமான தோழர் க. பாண்டியன் தலைமை தாங்கினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, தமிழக உழவர் முன்னணி துணைத்தலைவர் தோழர் மு. தமிழ்மணி, திரு. வ. செயக்குமார் (இடையன்குளம்) , திரு. த. ஞானராசு (வட்டார ஒருங்கிணைப்பாளர், கோமதிமுத்துபுரம்), திரு. குருசாமி (சிவகிரி) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிறைவில், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உழவர்கள், பெண்கள், மாணவர்கள் பங்கேற்றதோடு, செண்பகவல்லி உரிமைக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், சென்னை உயர்நீதிமன்றம் செண்பகவல்லி அணையை செப்பனிடுமாறு உத்தரவிட்ட பிறகும் தீர்ப்பை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் கேரள அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT