உடனடிச்செய்திகள்

Monday, February 11, 2019

மதுரையில் எழுச்சியோடு நடந்த.. தமிழர் மறுமலர்ச்சி மூலவர் “வள்ளலார் பெருவிழா!”

மதுரையில் எழுச்சியோடு நடந்த.. தமிழர் மறுமலர்ச்சி மூலவர் “வள்ளலார் பெருவிழா!”
தமிழர் மறுமலர்ச்சி மூலவர் - “வள்ளலார் பெருவிழா” தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (10.02.2019) மாலை மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மதுரை பெத்தானியாபுரத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முன்னிலை வகித்தார். தோழர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார்.

அலங்காநல்லூர் அபிநயா கலைக்குழுவினரின் பறையாட்டத்தோடு தொடங்கிய “வள்ளலார் பெருவிழா”வில், பள்ளிச்சிறுவன் இலக்கியன் வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு குறித்து சிறப்பாகப் பேசியது பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.

இதனையடுத்து நடைபெற்ற உரையரங்கில், "தமிழர் உரிமை ஆன்மீகப் போராளி" - தவத்திரு. இரா. கருடசித்தர் (அழகர் கோயில்), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வள்ளலாரின் ஆன்மிக நெறி குறித்து உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் விழா பேருரை நிகழ்த்தினார். தோழர் மேரி (மகளிர் ஆயம்) நன்றி கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு தோழர்கள் கதிர்நிலவன், “விடியல்” சிவா ஆகியோர் பெருவிழா நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

நிகழ்வில் இறைநெறி அன்பர்களும், தோழமை அமைப்பினரும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 


காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT