உடனடிச்செய்திகள்

Tuesday, February 26, 2019

சமூக வலைத்தளங்களில் செயல்புரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

சமூக வலைத்தளங்களில் செயல்புரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுக்கு வேண்டுகோள்!
சமூக வலைத்தளங்களில் செயல்புரியும் பேரியக்கத் தோழர்களும், ஆதரவாளர்களும் துடிப்புடன் நம் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வது பாராட்டிற்குரியது.

அதேநேரம் நம் தமிழ்த்தேசியத் தோழமை இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு மனக்காயம் ஏற்படும்படி எந்தத் திறனாய்வும் செய்யாதீர்கள். அவ்வாறான திறனாய்வைத் தவிர்த்து விடுங்கள்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தேர்தலுக்கு வெளியே இயங்கி தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து வருகிறது. அதேநேரம், தேர்தலில் பங்கெடுக்கும் சில கட்சிகளுடனும், மக்கள் உரிமைப் போராட்டங்களில் கூட்டுச் செயல்பாடுகள் கொண்டுள்ளோம். அந்தத் தோழமை பாதிக்காத வகையில் நம் தோழர்கள் கருத்துகளை பொறுப்புணர்ச்சியுடன் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்ததில் நம் பங்கு முகாமையானது. அதேவேளை நம் முன்னோர்களின் பங்களிப்புகளை நாம் போற்றுகிறோம். அவர்கள் பங்களிப்பைக் குறைத்து நம் பங்களிப்பை மேலதிகமாகக் காட்டிக் கொள்ளும் முனைப்பு நம் தோழர்களிடம் எழக்கூடாது. இந்த மனப்பக்குவமும் கட்டுப்பாடும் தேவை!

தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கு எதிரான கருத்தியல்கள் மற்றும் அத்தரப்புத் திறனாய்வுகள் ஆகியவை குறித்துத் திறனாய்வு செய்யும் நம் தோழர்கள் – தனிநபர் தாக்குதலில் இறங்கக்கூடாது. நம்மை எதிர்ப்போர் கொச்சையாகத் திறனாய்வு செய்தாலும் நாம் அப்படி செய்யக்கூடாது.

கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
26.02.2019.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT