உடனடிச்செய்திகள்

Monday, May 20, 2013

ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!




வரும் 2013 சூன் மாதத்திலிருந்து தமிழக அரசின் 3200 தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை அரசுப் பள்ளிகளில் தமிழில் நடத்தப்பட்டு வந்த அறிவியல், சமூகவியல் ஆகிய பாடங்கள் ஆங்கில மொழியில் நடத்தப்படும்.

10.05.2013 அன்று நிதிநிலை அறிக்கையின் கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு விடையளித்துப் பேசிய தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள், 3200 பள்ளிகளில் மட்டுமல்ல, பெற்றோர்கள் விரும்பினால் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்குவோம் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் இம்முடிவுக்கு எதிராக சென்னையிலுள்ள பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆங்கிலத்தை மொழிப் பாடமாக(Language) கற்பிப்பதை நாம் ஆதரிக்கிறோம். அம்மொழியைச் சிறப்பாகக் கற்பிக்க ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இப்போது பெரும்பாலும் வரலாறு, பொருளியல், கணக்கு, வணிகவியல் ஆகியவற்றைப் படித்த இளநிலைப் பட்டதாரிகளோ அல்லது முதுகலைப் பட்டதாரிகளோ தான் ஆங்கில ஆசிரியராக உள்ளார்கள்.

கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பாடங்களை ஆங்கில வழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனனம் செய்யும் சுமை ஏற்படுகிறதே தவிர, இயல்பாக அவற்றைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அறிவு வளர்ச்சிக்குத் தாய்மொழி மூலம் கல்வி கற்பதே சிறந்த வழி என்று உலகெங்கும் கல்வி இயல் வல்லுநர்களும் குழந்தை உளவியல் வல்லுநர்களும் கூறுகிறார்கள். சற்றொப்ப எல்லா நாடுகளிலும் தாய்மொழி வழியிலேயே தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகக் கல்விவரை, கற்பிக்கிறார்கள்.

தமிழ் தவிர இதரப் பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும்போது, கிராமப்புற மாணவர்கள், அட்டவணை வகுப்பு மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் மற்றும் பெண்கள் இயல்பாகப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் சுமைக்கு ஆளாவார்கள். இவர்கள் நகர்ப்புற, மற்றும் முன்னேறிய வகுப்பு மாணவர்களோடு போட்டியிட முடியாமல் பின்தங்கி விடுவார்கள். தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி, மனப்பாதிப்பு அடைவார்கள். இதனால் கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் பின்தங்கி விடுவார்கள்.

பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல், ஆங்கில வழி வகுப்புகளுக்காக தனியாரின் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அதனால் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூட வேண்டிய நிலை உள்ளது என்று தமிழக அரசு, ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்குவதற்கான காரணத்தைக் கூறுகிறது.

இந்நிலையில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் முன் வைத்து தமிழக அரசின் முடிவுக்கெதிராக, 28.05.2013 அன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்குநரகம் முன் பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

1. 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

2. அரசுப்பள்ளிகளின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த வேண்டும். தண்ணீர்க்கும் துப்புரவிற்கும் தட்டுப்பாடில்லாத கழிவறைகள், விளையாட்டுத் திடல் போன்றவை வேண்டும். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற துறைகளுக்குத் தனித்தனி ஆசிரியர் வேண்டும்.

3. மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிலியல் படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

மேற்கண்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டுமெனம், அவ்வாறு செய்யாமல் ஆங்கில வழி வகுப்புகளைப் பெருமெடுப்பில் அரசுப் பள்ளிகளில் தொடங்கினால், கிராமப்புற, அட்டவணை வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாகப் பெண்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் தமிழ் மொழியின் அழிவுக்கும் அது வழி கோலும்.

இவ்வாறு அவ்வறிக்கைத் தெரிவிக்கிறது.

முன்னதாக, இதற்கான ஆலோசனைக் கூட்டம், கடந்த 18.05.2013 அன்று, சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ஒருங்கிணைத்தார்.

பேராசிரியர் பிரபா.கல்விமணி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு, பாவலர் இன்குலாப், உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந.அரணமுறுவல், சென்னை மாவட்டத் தலைவர் புலவர் இறையெழிலன், தலைநகர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் சுந்தராசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், சேவ் தமிழஸ் இயக்கப் பிரதிநிதி திரு. நாசர், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பொறுப்பாளர்களும், பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர். இக்கலந்துரையாடலின் அடிப்படையில், உருவாக்கப்பட்ட தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் தான், இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ் மீதும், கல்வி மீதும் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுமென்றும் தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தொடர்புக்கு: 044-24348911

Friday, May 3, 2013

தமிழகமெங்கும் த.தே.பொ.க. சார்பில், மே நாள் கொண்டாட்ட நிகழ்வுகள்!



மே – 1 உழைப்பாளர் நாள் (01.05.2013) அன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

சென்னை
P1090828 copy

சென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையிலுள்ள த.தே.பொ.க. தலைமை அலுவலகம் எதிரில் காலை 10.30 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி முழக்கங்கள் எழுப்ப, கூடியிருந்த தோழர்கள் அதை எதிரரொலித்தனர். இந்நிகழ்வில், த.தே.பொ.க. – த.இ.மு. நிர்வாகிகளும், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட உணர்வாளர்களும் பங்கேற்றனர். பின்னர், த.தே.பொ.க. அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கூட்டத்தில், தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார்.

சிதம்பரம்
4
சிதம்பரம் காசுக்கடைத்தெரு – நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு த.தே.பொ.க. தோழர் மு.முருகவேல் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ம.கோ.தேவராசன், சிதம்பரம் கிளைச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், காட்டுமன்னார்குடி கிளைச் செயலாளர் தோழர் சிவ.அருளமுதன், தோழர் பா.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் மே நாள் முழக்கங்கள் எழுப்ப, த.தே.பொ.க தோழர் ச.மணிவண்ணன் கொடியேற்றினார்.

ஓசூர்
ஓசூர் இராமநகரில் காலை 10 மணியளவில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் முருகப்பெருமாள் தலைமையில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து கொடி ஏற்றி வைத்துப் பேசினார். தோழர் வ.கனகராஜ் நன்றி கூறினார்.

தஞ்சை நகரம்
தஞ்சை நகரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு 10 இடங்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகத்தில் நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமையில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு கொடி ஏற்றி வைத்துப் பேசினார்.

கலைஞர் நகர் கிளை சார்பாக காலை 10.30 மணியளவிலும், கோரிக்குளம் கிளை சார்பாக காலை 11.00 மணியளவிலும் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுகளில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க.கொடி ஏற்றி வைத்துப் பேசினார்.

பூக்காரலாயம் கிளை சார்பாக காலை 11.30 மணியளவில், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி த.தே.பொ.க. கொடியையும், நகரத் துனைச் செயலாளர் தோழர் தமிழ்ச் செல்வன் த.இ.மு. கொடியையும் ஏற்றி வைத்துப் பேசினர். அண்ணா நகர் முதல் தெரு கிளை சார்பாக பிற்பகல் 12.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்துப் பேசினார். தஞ்சை நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் லெ.ராமசாமி த.இ.மு.கொடி ஏற்றி வைத்தார்.

இந்திரா நகர் கிளை சார்பாக பிற்பகல் 1.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சிவராசு த.இ.மு.கொடி ஏற்றி வைத்தார். இரங்கநாதபுரம் கிளை சார்பாக மதியம் 01.30 மணியளவில் தஞ்சை நகரச் துணைச் செயலாளர் தோழர் தமிழ்செல்வன் த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்தார். அண்ணா நகர் ஏழாவதுத் தெரு கிளை சார்பாக மதியம் 2.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்துப் பேசினார். பழைய பேருந்து நிலையம் பழக்கடை கிளை சார்பாக மாலை 06.00 மணியளவில் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க. கொடி ஏற்றி வைத்துப் பேசினார்.


வடக்கு வாசல் – பொதுக்கூட்டம்
5
வடக்கு வாசல் கிளை சார்பாக மாலை 06.30 மணியளவில் வடக்குவாசல் நான்கு வழிச் சாலையில் தமிழீழம், தமிழகம் செய்ய வேண்டியது என்ன கொள்கை விளக்க மே நாள் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை நகர துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்செல்வன் தலைமையேற்றார். தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.சிவராசு, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், லெ.இராமசாமி, தமிழக இளைஞர் முன்னணி நடுவன் குழு உறுப்பினர் தோழர் க.செந்திறல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார். வடக்கு வாசல் கிளைச் செயலாளர் தோழர் ந.புண்ணியமூர்த்தி நன்றி நவின்றார்.

பூதலூர் ஒன்றியம்
4
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு 25 இடங்களில் நடைபெற்றது. காலை 9 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் செந்தில்குமரன், த.தே.பொ.க. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.தேவதாசு, தோழர் கு.சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். நிறைவில், செங்கிப்பட்டியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில், மே நாள் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினர்.

குடந்தை

3

2

1
குடந்தையில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு, குடந்தை, சாமிமலை, தேவராயன்பேட்டை ஆகிய 3 இடங்களில் சிறப்புற நடைபெற்றது.

குடந்தை ஆழ்வான் கோயில் தெரு சந்திப்பில் காலை 10 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, குடந்தை நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். சாமிமலை தெற்கு வீதி – திருமஞ்சன வீதி சந்திப்பில் காலை 10.45 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. சாமிமலை கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்றார். தேவராயன்பேட்டை முதன்மைச் சாலையில், காலை 11 மணியளவில், நடைபெற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். மூன்று இடங்களிலும், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடி ஏற்றி வைத்தார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன், தோழர் கோ.வளவன் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

மதுரை
மதுரை செல்லூர் தாகூர் நகர் நுழைவு வாயிலில், காலை 10.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தோழர் செரபினா கொடியேற்றி கருத்துரை வழங்கினார். சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிறைவில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் சிறப்புரை நிகழ்த்தினார். தோழர் மேரி நன்றி கூறினார்.

முருகன் குடி
murugan
thurai
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் முருகன்குடியில் மே நாள் விழா காலை 10.00 மணியளவில் நடைபெற்றது,அதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளை செயலாளர் அரா.கனகசபை கொடியேற்றினார். பின்னர் மே நாள் முழக்கங்கள் எழுப்பட்டது. துறையூரில் காலை 10.30 மணியளவில் தமிழக இளைஞர் முன்னணி கிளை செயலாளர் இளநிலா கொடியேற்றினார்.

பரமக்குடி
பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் முருகன் தலைமையேற்றார். ஆசிரியர் சவுந்திரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கொடியேற்றி வைத்து கருத்துரை நல்கினார். தோழர் இளங்கோ(த.தே.பொ.க.) நன்றி கூறினார்.

புதுக்கோட்டை
1
2
3
6
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மே நாள் கொடியேற்று விழா 02.05.2013 அன்று காலை தொடங்கி நடைபெற்றுது. காலை 10 மணியளவில் தொடங்கிய கொடியேற்று விழா, சோழகம்படடி, தெம்மாவூர், காரடிவயல், திருமலைராயபுரம், திருமலைப்பட்டி, செங்களுர், காட்டுக்கோட்டைப்பட்டி, உலங்காத்தான்பட்டி, கொத்தம்பட்டி, கிள்ளுக்கோட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்றது.

மாலை கிள்ளுக்கோட்டையில், ‘ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்’ என்ற தலைப்பில், தெருமுனைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆரோக்கியசாமி தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றினார். தோழர் இலட்சுமணன் நன்றி கூறினார்.


(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

Thursday, May 2, 2013

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் அ.தி.மு.க. அரசின் முடிவை கண்டிக்கிறோம்! - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும்
.தி.மு.. அரசின் முடிவை கண்டிக்கிறோம்! 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 
பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைத்தளங்களில், தமிழின உணர்வாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகளின் உளவுத்துறையின் துணையோடு, சென்னை மாநகர இணை ஆணையர் தலைமையில், தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படுவதாக இன்று இந்து நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளது.  

சமூக வலைத்தளங்களில் செயல்படுகின்ற தமிழக இளைஞர்கள், அதில் தங்கள் கருத்துகளை சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்வதுடன், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிங்கள அரசு இழைத்தக் குற்றங்களை மற்றவர்களுக்கு தெரியவைக்கும் வகையில் பரப்புரையும் மேற்கொள்கின்றனர்.

பெரும் ஊடகங்கள் இன்றைக்கு அரசியல்வாதிகள், பெரும் முதலாளிகள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில், இது போன்ற சமூக வலைத்தளங்கள்தான் மக்களின் உண்மையான கருத்துகளை பிரதிபலிக்கும் ஊடகமாக விளங்கிவருகின்றது. இதனால் தான், உலகெங்கும் வெவ்வேறு சிக்கல்களில் போராடுகின்ற மக்கள், இயல்பாக சமூக வலைத்தளங்களில் தங்கள் போராட்டங்களின் ஞாயம் குறித்து பரப்புரை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டு மாணவர்கள், இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசு மீது பொருளியல் தடை விதிக்க வேண்டும், தமிழீழ இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், தமிழீழ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன் வைத்து வெளியில் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இது இந்திய அரசமைப்புச் சட்ட விதி வழங்கியுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை அடிப்படையிலான உரிமையாகும்.

இந்நிலையில், தமிழகக் காவல்துறையின் இவ்வறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் இயங்கும் மாணவர்களையும், தமிழின உணர்வாளர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கலையும், னி உரிமை இயக்கங்களையும் ஒடுக்குவதற்காக விடுக்கப்பட்டதாகவே கருதுகிறோம். இது இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கின்ற சர்வாதிகாரச் செயலுமாகும். இத் தாக்குதலில் தமிழின உணர்வு அரசியலை நோக்கி கூர்மைப்பட்டு உள்ளதை தமிழர்கள் கவத்தில் கொள்ள வேண்டும்.
ஒருபுறம், சட்டப்பேரவையில் தமிழீழத்திற்கான பல தீர்மானங்களை இயற்றுகின்ற .தி.மு.. அரசு, இன்னொருபுறம் போராடும் மக்களை கண்காணிக்கும் நயவஞ்சக செயலிலும் டுப்படுகிறது. தமீழீழம் தொடர்பான போராட்டங்களையும் வெளிப்பாடுகளையும் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள  செயலலிதா அரசு விரும்புகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

எனவே கருத்துரிமையைப் றிக்கின்ற தமிழினப்பகை நடவடிக்கையை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மாணவர்களும், தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசிய அமைப்புகளும் உடனடியாக கவனம் செலுத்தி, அரசின் இம்முடிவுக்கு எதிராக கரம் கோத்துப் போராடவும் அழைப்பு விடுக்கிறோம்.

இங்ஙனம்,
கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

இடம்: சென்னை-17.

Tuesday, April 23, 2013

தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் – தோழர் பெ.மணியரசன் பேச்சு!



”தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல்”
வழக்கறிஞர் பாவேந்தன் இல்லத் திருமண விழாவில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும், ஈரோடு மாவட்டம், குன்றத்தூர், பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது.

அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம்:

“இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேச விடுதலையும் தேவையென்றார். வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். மக்களுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் போராடி சிறை செல்பவர்களுக்கு கட்டணமின்றி வழக்கு நடத்துபவர். வழக்குகளில் விடுதலை வாங்கித் தருவார். அவரை நான் போராட்டக் காவலன் என்று அழைப்பதுண்டு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள வழக்கறிஞர் தமிழ்த் தேசியம் குறித்து இவ்வளவு சிறப்பாகவும் அழுத்தமாகவும் பேசியது கால மாற்றத்தின் அறிகுறியாகும். தமிழ்ச்சமூகத்திற்குள் இன்று உருவாகி வரும் ஒரு மாற்றத்தை, பெரிய பாய்ச்சலுக்கான ஓர் உள்இயக்கத்தை அறிவிக்கும் வெளிப்பாடாக அவரது பேச்சை நான் கருதுகிறேன்.
மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டு மென்றார்.

தமிழ்த் தேசியம் என்பது இன்று ஒரு தனித்துவமான சித்தாந்தமாக – கருத்தியலாக வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே தமிழ்மொழி சார்ந்து, தமிழ் இனம் சார்ந்து அமைப்புகள் செயல்பட்டிருக்கின்றன. போராட்டங்கங்கள் நடந்திருக்கின்றன. பெருமளவுக்கு தியாகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அப் பொழுதெல்லாம். தமிழ்த்தேசியம் என்ற ஒரு சித்தாந்தம் முன் வைக்கப்படவில்லை, வளர்க்கப்படவில்லை. இப்பொழுதுதான் தமிழ்த்தேசியம் என்ற சித்தாந்தத்தை முன் வைத்து அதனை வளர்த்து வருகிறோம்.

தமிழ்த் தேசியம் தனக்குத் தேவையானதை மார்க்சியத்திடமிருந்தும் பெரியாரியத்திலிருந்தும் அம்பேத்கரியத்திடமிருந்தும் எடுத்துக்கொள்ளும். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகியவற்றின் கலவையல்ல. தமிழ்த் தேசியம் தனித்துவமானது. அது தமிழர் அறம் என்ற மெய்யியலின் மேல் நிற்கிறது. தமிழர்களுக்கென்று இன அரசியல், மொழி அரசியல் இருக்கிறது. தமிழர்களுக்கென்று சக மனிதர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான அறக்கோட்பாடு இருக்கிறது. இவற்றை மேலும் வளப்படுத்த புதிய கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் இருந்து வந்திருக்கிறது. அந்த புரிதலோடுதான் தமிழ்த் தேசியம் ஒரு தனி சித்தாந்தம் என்று நான் சொல்கிறேன்.

சங்கக் காலத்தில் கணவன் மனைவியை சமத்துவ நோக்கில் தலைவன் – தலைவி என்றே அழைத்தார்கள். பிற்காலத்தில் தமிழினத்தில் பெண்ணடிமைக் கருத்துகள் ஏற்பட்டன. பெண்ணடிமைத்தனத்தை நம் சமூகத்திலிருந்து நாம் நீக்கியாக வேண்டும். மணமக்கள் பாரி – சிந்து திருமணம்; காதல் திருமணம் என்றார்கள். சாதி மறுப்புத் திருமணம் என்றார்கள். மணமக்களுக்கும், மணமகள் பெற்றோர்க்கும் நெஞ்சு நிறைந்தப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் பதவிகளுக்கு சாதியைப் பயன்படுத்த முனைவோர் சிலர், காதல் திருமணம் கூடாதென்கிறார்கள். நாடகக் காதல் என்கிறார்கள். சாதி ஒழிந்து விடுமோ என்று கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தை எதிர்ப்பதை பார்த்தால் சொந்த சாதிக்குள் கூட காதல் திருமணம் நடக்கக் கூடாது என்று கவலைப்படுவது போல் தெரிகிறது. இந்த தடைகளையெல்லாம் உடைத்து சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் பெருக்கத்தான் போகின்றன.

மணமக்களுக்கு ஒரே கருத்தை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன். காதல் திருமணம் செய்து கொண்டாலும், பிணக்குகள் வரத்தான் செய்யும். பிணக்கு இருக்கத்தான் வேண்டும். அது உப்பைப் போல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கணவன் மனைவி வாழ்க்கையில் சுவை இருக்கும் என்று நம்முடைய பெரியவர் திருவள்ளுவர் சொன்னார். உப்பு இல்லாவிட்டால் உணவு சப்பென்று இருக்கும், உப்பு அதிகமாகி விட்டால் சாப்பிடமுடியாமல் கரிக்கும். உப்பைப் போல் அளவோடு பிணக்கு இருக்கட்டும் என்றார்.

இன்னொன்றையும் பெரியவர் சொன்னார். கணவன் மனைவியிடையே பிணக்கு வந்தால் நாள்கணக்கில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. கணவனோ அல்லது மனைவியோ வலிந்து போய் பேசினால் தோற்றுப் போனதாகும் என்று கெளரவம் பார்க்கக் கூடாது. ஊடல் என்ற பிணக்கில் வலிந்து போய் முதலில் பேசி பிணக்குத் தீர்ப்பவர்தான் வெற்றிப் பெற்றவர் ஆவார். அந்த வெற்றி இருவரின் வெற்றி. பின்னர் அவர்கள் மகிழ்ந்திருக்கும் போது அதன் பெருமை தெரியும் என்றார் அவர்.

பாரிக்கும் சிந்துவுக்கும் பிணக்கு வந்தால் உங்கள் தாத்தாவான திருவள்ளுவர் சொன்ன திருக்குறளை நினைத்து செயல்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் கணப் படும். – குறள்

Monday, April 22, 2013

பேராசிரியர் புல்லரை விடுவிக்க வேண்டும்!

 பேராசிரியர் புல்லரை விடுவிக்க வேண்டும்!
பஞ்சாப்பில் சீக்கிய இன உரிமைகளுக்காகப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்தபேராசிரியர் புல்லார் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி தூக்கிலிடமுனைந்துள்ள இந்திய அரசைக் கண்டித்தும்பேராசிரியர் புல்லாரை விடுவிக்கக் கோரியும் நேற்று(21.04.2013) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில்உண்ணாப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தைபேராசிரியர் சரசுவதி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணிபொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திருகுணங்குடி அனீபா.தி.மு.வெளியீட்டுப்பிரிவுச் செயலாளர் திருவந்தியத்தேவன்நாம் தமிழர் கட்சியின் தோழர் ராஜன்இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர்வழக்கறிஞர் உமர்கயான்மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திருஅதியமான்உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசினர்.






தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் அருணபாரதி போராட்டத்தில் பங்கேற்று வாழ்த்துரைவழங்கினார்சென்னை சீக்கிய இளைஞர்கள் அமைப்பைச் சேர்ந்த திருபேஜ்தீப் சிங் உள்ளிட்ட சீக்கிய இனத் தலைவர்களும்இளைஞர்களும் இதில்பங்கேற்றனர்.

மாலைவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருதொல்.திருமாவளவன் பழரசம் அளித்து உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்தார்நிகழ்வைமரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருசெல்வராஜ் முருகையன்தோழர் ஹரிஹரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.




இப்போராட்டத்தில்தமிழின உணர்வாளர்களும்மனித நேயர் ஆர்வலர்களும் மட்டுமின்றிசீக்கிய இன இளைஞர்களும் பங்கேற்றனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT