உடனடிச்செய்திகள்

Wednesday, March 7, 2007

காவிரித் தீர்ப்பை எதிர்த்து மனிதச்சங்கிலி

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து 05-03-2007 அன்று மாலை தியாகராய நகர் பனாகல் பூங்காவிலிருந்து, நந்தனம் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், ம.செ.தெய்வநாயகம், ம.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காவிரி உரிமை மீட்புக்கான தமிழ்க் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் அமைப்பு இந்நிகழ்வை நடத்தியது. தமிழ்க் கலை இலக்கிய பேரவை செயலாளர் தோழர் நெய்வேலி பாலு, ஓருங்கிணைப்பாளர் தோழர் உதயன், தமிழர் கண்ணோட்டம் மாத இதழ் வெளியீட்டாளர் தோழர் அ.பத்மனாபன், ஓவியர் வீரசந்தானம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி செங்குன்றம் கிளைச் செயலாளர் தோழர் பாலமுரளி, கவிஞர் கவிபாஸ்கர், கவிஞர் தாமரை, கவிஞர் சினேகன் உள்ளிட்ட தமிழ் படைப்பாளிகளும் எண்ணற்ற மாணவ மாணவியரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

06-03-2007 அன்று டெக்கான் க்ரானிக்கல் ஆங்கில ஏட்டில் வெளிவந்த புகைப்படம்



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT