உடனடிச்செய்திகள்

Tuesday, August 16, 2011

மூன்று தமிழர் உயிர் காக்க சென்னையில் நாளை(17.08.2011) த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

மூவர் உயிர் காக்க மூண்டெழு தமிழகமே

பேரறிவாளன், முருகன், சாந்தன் மரண தண்டனையை

தமிழக அரசு ஆளுநர் மூலம் இரத்து செய்ய வேண்டும்!

 

சென்னையில் நாளை(17.08.2011) ஆர்ப்பாட்டம்

 


இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் நடுவண் சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அநியாயமாக சிறைபட்டிருக்கும தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.   

 

மோசடியாக துன்புறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்களையே ஒரே சாட்சியமாக்க் கொண்டு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனைகளை, மாண்புமிகு தமிழக முதல்வர் செ.செயலலிதா அவர்கள், தமிழக ஆளுநருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட விதி 161 வழங்கும் அதிகாரத்தின் மூலம் இரத்து செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னையில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 

நாளை(17.08.2011) மாலை 5 மணியாளவில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார்.

 

ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் திரு. தங்கர் பச்சான், திரு புகழேந்தி தங்கராஜ், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் புலவர் அரணமுறுவல், ஓவியர் வீரசந்தனம் உள்ளிட்ட பல்வேறு தமிழன ஆதரவாளர்களும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.

 

இவ்வார்ப்பாட்டத்தில், மரண தண்டனையை ஒழிக்க விரும்பும் மனித நேயர்களும் தமிழ்த் தேசியர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்  கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT