உடனடிச்செய்திகள்

Saturday, August 27, 2011

திருச்சியில் நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்!

திருச்சியில் நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்!


21 ஆண்டுகளாக கொடுஞ்சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, மக்கள் உரிமைப் பேரவை சார்பில் திருச்சியில், நாளை(28.08.2011) மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. நாளை மாலை 4 மணியளவில், திருச்சி புத்தூர் நான்கு சாலையில் அமைந்துள்ள சண்முகா திருமண மண்டபத்தில் இக்கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

 

கருத்தரங்கத்திற்கு, மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமை தாங்குகிறார். மதுரை வழக்கறிஞர் சு.அருணாச்சலம் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ப.பா.மோகன், தி.லஜபதிராய், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரைசன் நிறைவுரையாற்றுகிறார். திருச்சி நகரைச் சுற்றியுள்ள உணர்வாளர்களும், பொது மக்களும் இக்கருத்தரங்கில் திரளாக பங்குபெற வேண்டுமென மக்கள் உரிமைப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வெளியீட்டுப் பிரிவு 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT