உடனடிச்செய்திகள்

Sunday, December 2, 2012

“தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற தமிழகப் பெருவிழாவில் சூளுரைப்போம்” தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு


தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற  தமிழகப் பெருவிழாவில் சூளுரைப்போம்
தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு

தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற தமிழகப் பெருவிழாவில் சூளுரைப்போம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும்,தமிழ்க்காப்பணியின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

1956  நவம்பர் 1-இல் மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவானதை நினைவுக்கூர்ந்து ஆண்டுதோரும் தமிழ்க் காப்பணி அமைப்பு தமிழகப் பெருவிழாவைகொண்டாடி வருகிறதுஇதன்படி இந்த ஆண்டும் தமிழ்க்காப்பணி சார்பில் தமிழகப் பெருவிழா நேற்று(30.11.2012) வெள்ளி மாலை 5 மணியளவில் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.

சிதம்பரம் மேலவீதி பெல்காம் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தமிழ்க்காப்பணியின் தலைவர்  பேராசிரியர் அழ.பழனியப்பன் அவர்கள் தலைமைத்தாங்கினார்துணைச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வரவேற்றுப் பேசினார்இராமசாமி செட்டியார் நகர மேனிலைப் பள்ளி மாணவர்கள் பி.அறிவன்,பி.ஆதவன்தனுஷ் ஆகியோரது சிலம்பாட்டமும்காமராஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி இராஐஸ்வர்ய நிரஞ்சனி சதிராட்டமும்புவனகிரி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி பாண்டியன் குழுவினரின் நாட்டுப்புறக்கலையும்,  நகராட்சிப் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி .ஹர்ஷினி தமிழிசைப் பாடலும்காண்போர் மனதை கவரும் வகையில் அமைந்தன.

தமிழ்க்காப்பணி சார்பில் சிதம்பரம் வட்ட பள்ளி மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்கான பரிசளிப்பும் நடைபெற்றது. புவனகிரி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியைச் சேர்ந்த, கண் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி மாணவர், திரு. ம.அருள்செல்வன் பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வென்று பார்வையாளர்களை ஈர்த்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்தமிழ்க்காப்பணி பொதுச்செயலாளர் திரு. பா.பழநிதிருமதிஜோதிமணி பழநி ஆகியோர்வெற்றிப் பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசினார்விழாவில் தமிழ்க்காப்பணி அமைப்புக் குழு உறுப்பினரும், ஆசிரியரியருமான திருமு.முருகவேல்அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளித்துப் பேசியமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசும் போது, “இன்றைக்கு வேலைக்காகப் படிக்கும் போக்கு தான் தொடர்ந்து கொண்டிருக்கிறதுஅதிலும்ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் மோகம் தான் எங்கும் உள்ளதுஇதுமாற வேண்டும்தமிழ் வழியில் பாடங்களைஅதிலுள்ள கருத்துகளை புரிந்து கொண்டு படிக்கும் போக்கு வளர்ச்சி பெற வேண்டும்தமிழ்வழியில் பயின்றவர்கள்இன்று அறிவியலாளர்களாகவும்முக்கியப் பதவிகளில் செயல்படும் அதிகாரிகளாகவும் முன்னேறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்நமது கேரியார் என்பது நாம்எதை விரும்புகிறோமோ அதுவாகத்தான் அமைய வேண்டும்நமக்கு எதில் ஈர்ப்பும்ஈடுபாடும் இருக்கிறதோஅதுவே நம் கல்வியாக இருந்தால் நாம் நிறையசாதிக்க முடியும்பெற்றோர்களும்தம் பிள்ளைகளுக்கு எதில் ஈடுபாடு உள்ளதோஅதை அறிந்து கொண்டு அவர்களைப் படிக்க வேண்டும்பிள்ளைகள் மீது தம்விருப்பங்களைத் திணிக்கக் கூடாதுபொறியியல்மருத்துவம் போன்ற படிப்புகள் மட்டுமல்லாமல்சமூக அறிவியல்வரலாறு என நிறைய அறிவுசார்ந்த படிப்புகள்இன்றைக்கு வளர்ந்துள்ளனதமிழ்ச் சமூகத்தில்அதற்கானத் தேவையும் உள்ளதுஅத்தேவையை நிறைவு செய்யும் வகையில் நாம் படிக்க வேண்டும்” எனக்குறிப்பிட்டார்.

நிறைவாக சிறப்புரையாற்றியதமிழ்க்காப்பணியின் ஒருங்கிணைப்பாளரும்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர்கி.வெங்கட்ராமன் அவர்கள், “1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு அமைக்கப்பட்டதை நினைவுகூறும வகையில்இன்றைக்குத் தமிழகப்பெருவிழாவாக நாம் விழா எடுத்திருக்கிறோம்அவ்வாறு அமைந்த நாமது தாயகம்இன்றைக்கு ஒவ்வொரு உரிமைகளாக இழந்து கொண்டிருக்கிறதுநேற்றுதமிழக முதல்வருடன் நடத்தியப் பேச்சின் போதுகர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘காவிரியில் ஒரு சொட்டு நீரும் தரமுடியாது’ என கொக்கரித்திருக்கிறார்.தமிழ்நாட்டில் நிலவுகின்ற வறட்சியைக் கணக்கில் கொண்டுநாம் கேட்கும் நீரில் ஒரு பகுதியையாவது பேச்சுக்காவது கொடுக்கிறோம் என்று அவர்சொல்லவில்லைஎதுவுமே தரமாட்டோம் என சொல்லியிருக்கிறார்இது கர்நாடகாவின் இனவெறியைஇனவெறிப் பகையைதம் அப்பட்டமாக அடையாளம்காட்டுகிறதுஇந்திய அரசின் உறுதியான துணை இருப்பதால் தான்இவ்வளவுத் திமிரோடுகர்நாடகா இப்படி சொல்ல முடிகின்றது.

கர்நாடக முதல்வரின் அறிவிப்புஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்துவதாக இருக்கிறதென கொந்தளித்த தமிழக உழவர்களும்உணர்வாளர்களும் இன்றைக்குகாவிரி டெல்டா பகுதிகளில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மையை எரித்துள்ளனர்சிதம்பரத்தில்இன்று காலை தமிழக உழவர்முன்னணி சார்பில் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

காவிரி வெறும்தண்ணீர் சிக்கலல்லஅது ஓர் இனச்சிக்கல் என்பதையும்தமிழ் இனத்திற்கான மானச் சிக்கல் என்பதையும் தான் இந்நிகழ்வுகள் நமக்குஉணர்த்துகின்றனகாயம்பட்ட வேகத்தோடுகாவிரி உரிமை மீட்க நாம் போராட்டங்கள் நடத்த வேண்டியதே இன்றையத் தேவை.

மொழிவழி மாநில பிரிப்பின் போதுதமிழர் தாயகத்தில் இருந்த பல பகுதிகளை இந்திய அரசுஅண்டை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்ததுஅவ்வாறுதமிழர்கள்அதிகம் வாழ்ந்த தேவிகுளம்பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு வழங்கப்பட்டதால் தான்இன்றைக்கு அதே பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில்நமக்குள்ள உரிமையை கேரளா மறுத்துக் கொண்டுள்ளதுமுல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெற வேண்டியதமிழக உழவர்கள் வாழ்விழந்துநிற்கிறார்கள்நமது தாயகப் பகுதியானகச்சத்தீவை சிங்கள அரசுக்கு இந்திய அரசுக் கொடுத்ததன் விளைவாகத் தான்இன்றைக்கும் நமது தமிழ்நாட்டு மீனவர்கள்சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டும் உள்ளனர்எனவே தமிழர்தாயகத்தைப் பாதுகாப்பது என்பது மிக மிக முக்கியமான சிக்கலாகும்.

இன்றைக்கு தமிழ்நாட்டுப் பொருளியலும்வணிகமும் தமிழர் கைகளில் இல்லாத அளவிற்கு தமிழர் தாயகம் வெளியாரால் பறிக்கப்பட்டிருக்கிறதுஎனவே தான்,தமிழ்க்காப்பணி 1956க்குப் பின்தமிழகத்தில் குடியேறிய அனைவரயும் வெளியார் என வரையறை செய்துஅவர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது.அசாமில் 1971ஆம் ஆண்டுக்குப் பின்வந்தவர்களை வெளியாராகக் கணக்கிட்டுஇந்திய அரசு அங்குள்ள இயக்கங்களுடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளதை இங்குநாம் நினைத்துப் பார்க்க வேண்டும்அந்த ஒப்பந்தம் மீறப்படும் போது தான்அங்கு சிக்கல் வெடிக்கிறதுநமக்கும் அதே போன்றதொரு கணக்கெடுப்பும்,ஆணையமும் நம் தாயகத்தைப் பாதுகாக்கத் தேவைதற்போது உடனடியாகதமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும்,குடும்ப அட்டையும் கொடுப்பதை தடுக்க வேண்டும்தாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்” என பேசினார்.

நிறைவில், தமிழ்க்காப்பணியின் பொருளாளர் திருசி.ஆறுமுகம் நன்றி கூறினார். இந்நிகழ்வில்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், உணர்வாளர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். 










(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT