காவிரி டெல்டா பகுதிகளில் இன வெறியன் ஜெகதீஷ்
ஷட்டர் கொடும்பாவி எரிப்பு!
தமிழகத்திற்கு ஒரு
சொட்டு தண்ணீர் கூட திறந்து விட முடியாது என்று கொக்கரிக்கும் கர்நாடகா முதல்வர்
ஜெகதீஷ் ஷெட்டர் உருவ கொடும்பாவி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி
டெல்டா பகுதிகளில் கொளுத்தப்பட்டது.
தஞ்சை
தஞ்சை பழையப் பேருந்து
நிலையம் அருகில் காலை 11 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையில் கர்நாடக
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவகொடும்பாவியைக் கொளுத்தினர். பலர் கோவம் தாங்காமல்
உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.
இப்போராட்டத்தில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை, த.தே.பொ.க. தஞ்சை
நகர செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, பூதலூர் ஒன்றிய செயலாளர் க.காமராசு, நாம்
தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழக விவசாயிகள் சங்கம்
தஞ்சை மாவட்டச் செயலாளர் செங்கொடிச் செல்வன், மாவட்ட இணைச் செயலாளர் ஜெகதீசன்,
திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.மோகந்தாசு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்
தமிழின உணர்வாளர்கள் இக்கொடும்பாவி கொளுத்தும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
சிதம்பரம்
கன்னட இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் கொடும்பாவி
எரிப்புப் போராட்டம் சிதம்பரத்தில் இன்று காலை 11 மணியளவில், தமிழக உழவர் முன்னணி சார்பில் நடைபெற்றது.
தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர்
திரு, சி.ஆறுமுகம் தலைமையில் ஏறத்தாழ 50-க்கும்
மேற்பட்ட உழவர்கள் திரண்டு தெற்குவீதி - தெற்கு சன்னதி - சபாநாயகர் தெரு சீர்காழி
முதன்மை சாலை சந்திப்பில் எழுச்சியுடன் போராட்டத்தை நடத்தினர்.
”கன்னட இன வெறியன் ஜெகதீஷ் ஷட்டர் ஒழிக! காவிரி மறுக்கும்
ஜெகதீஷ் ஷட்டர் ஒழிக!” என்னும் கோபம் கொப்பளிக்கும் உணர்ச்சி
முழக்கங்களுக்கிடையில் ஜெகதீஷ் ஷட்டர் உருவப்
பொம்மை எரியூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த உருவ பொம்மை எரிந்து முடியும் வரை
உழவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
தமிழக உழவர் முன்னணி தலைவர், அ.கோ.சிவராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் மா.கோ.தேவராசன், திரு.மதிவாணன், திரு.தங்க,கென்னடி, திரு,சரவணன், மு,முருகவேல் மு.சம்மந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இப்போராட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த
உணர்வாளர்களும் தன்னிச்சையாக தங்களையும் இணைத்துக்கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
குடந்தை
குடந்தை தலைமை
அஞ்சலம் முன்பு காலை 11 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குடந்தை நகர
செயலாளர் விடுதலைசுடர் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவ
கொடும்பாவி கொளுத்தும் போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சுவாமிமலை கிளைச் செயலாளர் ம.முரளி, தேவராயன்
பேட்டை தமிழக இளைஞர் முன்னணிச் செயலாளர் பிரபாகரன், த.தே.பொக. தோழர் தீந்தமிழன், விடுதலை
தமிழ்ப்புலிகள் கட்சி செய்தி தொடர்பாளர் தளபதி சுரேஷ், ஒன்றிய செயலாளர் கை.சேகர் உள்ளிட்ட
தமிழீன உணர்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.
திருத்துறைபூண்டி
திருத்துறைபூண்டி
பேருந்துநிலையம் திருவள்ளூவர் சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய
செயலாளர் இரா.தனபால் தலைமையில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உருவ கொடும்பாவி
கொளுத்தப்பட்டது. போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயற்குழு
உறுப்பினர் தோழர் க.அரசு, வழக்கறிஞர் இ.தனஞ்செயன், தமிழக உழவர் முன்னணி தோழர்
ச.கோவிந்தசாமி உள்ளிட்ட திரளான தமிழின உணர்வாளர்கள் கலந்துக் கொண்டனர்.
காவிரி டெல்டா
பாசனப் பகுதிகளில் நடைபெற்ற, கன்னட இனவெறியன் ஜெகதீஷ் ஷெட்டர் கொடும்பாவி
எரிப்புப் போராட்டம், தமிழ் மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
(செய்தி: த.தே.பொ.க. செய்திப் பிரிவு)
கொடும்பாவி எரித்தால் தண்ணீர் வந்துவிடுமா எனக் கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இதை எரித்தது எங்கள் வயிறு அல்ல...எங்கள் கண்ணில் கொழுந்து விட்டு எரியும் கோவம்.
இது இறுதி எச்சரிக்கை
Post a Comment