உடனடிச்செய்திகள்

Wednesday, January 30, 2013

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது!

யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது!

சனநாயக வழியில் போராடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சிறைபடுத்தியுள்ள சிங்கள அரசுஅவர்களை விடுவிக்க வேண்டும் எனக்கோரி போர்க்குறறம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு சார்பில்சென்னையிலுள்ள சிங்களத் தூதரகம் இன்று(30.01.2013) காலைமுற்றுகையிடப்பட்டது

போராட்டத்தைஅமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.திருமலை ஒருங்கிணைத்தார்அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன்தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் கோபிநாத்தமிழ்நாடு மக்கள் கட்சி செயற்குழு உறுப்பினர் தோழர் அருண்சோரிமேபதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன்தந்தை பெரியார் தி. ஊடகத்துறை பொறுப்பாளர் சரவணன்மாநில இளைஞரணி செயலாளர்இராஜ்குமார், வழக்கறிஞர் கயல்விழிதோழர் தியாகு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 
சாலையை மறித்து மறியலில் அமர்ந்த தோழர்களுடன்காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனர்முடிவில், 70க்கும் மேற்பட்டதோழர்கள் கைது செய்யப்பட்டுகாவல்துறை வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்லப்ட்டனர். பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். 


(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)







போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT