உடனடிச்செய்திகள்

Wednesday, January 30, 2013

காவிரி உரிமை: கண்டனம் முழங்கிட நாளை உழவர்கள் ஆர்ப்பாட்டம்!


 கடந்த 29.01.2013 அன்று, காவிரி சிக்கல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கர்நாடகத் தரப்பின் வழக்கறிஞர் நாரிமன் கூறிய வாதங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர ஆணையிட முடியாதென்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. 

கர்நாடகம், காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியபடி 4 டி.எம்.சி. தண்ணீரைத் தான் குடிநீருக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், கர்நாடகம் வல்லடி வழக்காக, 8 டி.எம்.சி. நீரை எடுத்துக் கொள்வோம் என கூறியதைக் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 

காவிரி ஆணையத்தில் போய் தண்ணீா் பெற்றுங்கள் என தமிழகத்திற்குக் கூறிக் கொண்டு, உச்சநீதிமன்றம் ஒதுங்கிக் கொண்டது. இந்தியாவில் இறுதி அதிகாரம் படைத்த அமைப்பான உச்சநீதிமன்றமே, தமிழகத்தினுடைய சட்டப்படியான உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டது.

இதனால், 16 இலட்சம் சம்பா சாகுபடியும் 5 கோடி மக்களின் குடிநீரும் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக மக்கள் துயரடைகிறார்கள். இந்த அநீதியைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நாளை(31.01.2013) மாலை 5 மணியளவில், தஞ்சை தொடர்வண்டி நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

இதில், உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.
தொடர்புக்கு: 9443274002

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT