உடனடிச்செய்திகள்

Wednesday, October 2, 2013

கூடங்குளமஅணு உலையை இழுத்து மூடுக! தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுக! தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும், அணுஉலையை எதிர்த்து அறவழியில் போராடி வரும் மக்கள் மீது தமிழக அரசு போட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று(அக்டோபர் 2) தமிழக மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற  இவ்வார்ப்பாட்டங்களில் பல்வேறு இயக்கத் தலைவர்களும், தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.


சென்னை
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மக்கள் கட்சி பொதுச் செயலாளர் தோழர் செல்வி தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், ம.தி.மு.க. வடசென்னை மாவட்டச் செயலாளர் திரு. ஜீவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் திரு. தெகலான் பாகவி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் விடுதலைத் தோழர் கார்கி வேலன் ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி பங்கேற்று கண்டன உரையாற்றினார். தோழர் அன்பு தனசேகரன் (தி.வி.க.) நிகழ்வை ஒருங்கிணைத்தார்.


தஞ்சை
தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. துரை பாலகிருட்டிணன் தலைமையேற்றார். தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் திரு குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு ஆர்.பி.தமிழ்நேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு வீரன்.வெற்றிவேந்தன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்டத் தலைவர் திரு எம்.கணேசன், மள்ளர் மீட்புக்களம் மாவட்ட ஒருகிணைப்பாளர் திரு செந்தில் காலாடி, தாளாண்மை உழவர் இயக்கம் திரு கோ.திருநாவுக்கரசு, மனித நேய மக்கள் கட்சி திரு கலந்தர், எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் திரு முகமது இக்பால் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.


கடலூர்
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் அம்பேத்கார் சிலை அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் திரு.  தி.வேல்முருகன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு எஸ்.இராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் திருமாற்பன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு ஷேக்தாவுத், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் ப.மோகன், தமிழ்நாடு நூகர்வோர் கூட்டமைப்பு திரு நிஜாமுதின், தமிழர் தேசிய இயக்கம் திரு வை.இரா.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.


மதுரை 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு அன்பழகன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் கண்டன முழக்கங்களை எழுப்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் திரு உஞ்சை அரசன், நாம் தமிழர் கட்சி திரு. வெற்றிகுமரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் க.பரந்தாமன், தோழர் ஆறுமுகம்(சி.பி.ஐ-எம்.எல்.), திரு. ஜாபர் சுல்தான்(எஸ்.டி.பி.ஐ.), திரு. இப்ராகிம் (மனித நேய மக்கள் கட்சி), தோழர் செல்வம்(ஆதித்தமிழர் பேரவை), தோழர் ஆரோக்கியமேரி(தமிழ்நாடு மக்கள் கட்சி), வழக்கறிஞர் இராசேந்திரன்(சமநீதி வழக்கறிஞர் சங்கம்), தோழர் பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் கார்த்தி(மே பதினேழு இயக்கம்), தோழர் விடுதலைச்செல்வம் (த.ஒ.வி.இ.), தோழர் பகவந்தா(அனைத்து கல்லூரி மாணவர் இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்,  மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு பங்கேற்று கண்டன உரையாற்றினார். 


காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மனித நேய மக்கள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. எஸ்.எம்.சாஜகான் தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. அப்துல் சமது, ம.தி.மு.க. மாவட்டத் தலைவர் உதயம் திரு. கோ.இராதா, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. சூ.க.விடுதலைச்செழியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு. ச.தீனன், பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்), , எஸ்.டி.பி.ஐ. மாவட்ட அமைப்பாளர் திரு. முகமது பிலால், தமிழ்த் தேச மக்கள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் செந்தமிழ்க்குமரன், நாம் தமிழர் கட்சி காஞ்சி மேற்கு மாவட்டத் தலைவர் திரு. ஆ.சா.திருமலை, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் டேவிட் பெரியார், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கப் பொறுப்பாளர் திரு. காஞ்சி அமுதன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசீர்வாதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

 

கோவை 
கோவை - காந்திபுரம் தமிழ்நாடு உணவு விடுதி அருகில் காலை 10.00 மணியளவில் நடைபெற் ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளர் திரு. வி.என்.அபுதாஹீர் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு மோகன்குமார், நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பி.யூ.சி.எல். தோழர் பொன்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

 

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழுத் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்புக்குழு திரு. வீரசோழன், மாவட்டச் செயலாளர் திரு. இரமேஷ், மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் திரு. சாதிக்கான், தமிழக குடியரசு இயக்கத் தோழர் ஒப்புராவாளர், தோழர் சுப்பிரமணி (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), தோழர் முத்துவேல் (தமிழக இளைஞர் முன்னணி) உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதுப்பேருந்து நிலையம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு கே.எம்.சரீப்  தலைமையேற்றார். மனித நேய மக்கள் கட்சி திரு. என்.துரைமுகமது, த.மு.மு.க. திரு. முகமது சாதிக் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. தெ.கலைமுரசு, நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலாளர் திரு. ந.சத்தியமூர்த்தி, எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவர் திரு. கே.அசனுதீன், உலகத் தமிழர் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் திரு. துரை.மதிவாணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. மு.சரவண தேவா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மாவட்டச் செயலாளர் தோழர் த.அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்,  பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் தோழர் பெ.இலட்சுமணன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

 

ஈரோடு

ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ம.தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. கணேசமூர்த்தி தலைமையேற்றார். மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ப.இரத்தினசாமி, தமிழக உழவர் இயக்கத் தோழர் கி.வே.பொன்னையன், தோழர் நிலவன் (த.ஓ.வி.இ.) உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன், தமிழக இளைஞர் முன்னணி பவானி அமைப்பாளர் தோழர் பரமேசுவரன், தோழர்கள் பார்த்திபராசன், பழனிசாமி, தாயம்மாள், மா.செந்தில் குமார், செ.கருப்புசாமி, குரு.சேகர், தமிழன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். 

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT