உடனடிச்செய்திகள்

Friday, October 11, 2013

தோழர் தியாகு உயிரைக் காப்போம்! இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்


தோழர் தியாகு உயிரைக் காப்போம்!

இந்திய அரசே! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதே!

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாதென வலியுறுத்தி உண்ணாப் போராட்டம் நடத்தி வரும் தோழர் தியாகுவின் உயிரைக் காப்போம் எனவும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அக்டோபர் 11 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, "இலங்கையில் காமன்வெல்த்எதிர்ப்பியக்கம்" சார்பில் வழக்கறிஞர் பாவேந்தன் தலைமையேற்றார். இலங்கையில் காமன்வெல்த்எதிர்ப்பியக்க அமைப்பாளர் தோழர் மதியவன் தொடக்கவுரையாற்றினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், .திமு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில தொழிற்சங்கத் தலைவர் திரு. கோ.வி.சிவராமன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் செல்வி, தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அமர்நாத், தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. இரா.அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சேவ் தமிழ்ஸ் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .அருணபாரதி உரையாற்றினார்.

.தே.பொ.. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன், ..மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன் உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

தஞ்சை

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் தலைமையேற்றார்.

.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை.பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி தோழஎ ஜெ. கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் பாரி, திராவிடர் விடுதலை கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் காளிதாஸ், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் திரு. மதுபூர் .மைதீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் நிறைவுரையாற்றினார்.

சிதம்பரம்

சிதம்பரம், வடக்கு வீதி தலைமை அஞ்சலகம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் மூத்த நகர்மன்ற உறுப்பினர் - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளர் திரு. .இரமேஷ் தலைமைத் தாங்கினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத் துணை பொதுச் செயலாளர் திரு. .கண்ணன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. ..செல்லப்பன், .தி.மு. குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு. பா.ராசாராமன், நாம் தமிழர் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. செ.புகழேந்தி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் திரு. பழமலை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் .குபேரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.  

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிறைவுறையாற்றினார். .தே.பொ.. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்து பேசினார்.

தமிழக உழவர் முன்னணி, சிதம்பரம் சிறுதொழில் முனைவோர் அமைப்பு, மனித உரிமைகள் கழகம், தமிழக மாணவர் முன்னணி உளளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில்  திரளாகக் கலந்து கொண்டனர்.

பெண்ணாடம்

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் .முருகன் தலைமையேற்றார். மனித நேயப் பேரவை அமைப்பாளர் திரு.பஞ்சநாதன், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் திரு. விடுதலைகாசி, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. ஜோதிவேல், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு, தமிழக மாணவர் முன்னணி தோழர் தி.ஞானப்பிரகாசம், .தே.பொ.. முருகன்குடி செயலாளர் தோழர் கனகசபை, தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. இராமகிருட்டிணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ..மு தோழர் மணிமாறன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் ஆயம் தோழர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை தலைமை அஞ்சலகம் முன்பு தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தோழர் ஆரோக்கியமேரி தமையேற்றார். புரட்சி கவிஞர் பேரவை திரு. மறவர்கோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு. முதல்வன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர் விடுதலைச்செல்வன், ஆதித்தமிழர்ப் பேரவை தோழர் செல்வம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தோழர் திவ்யா, தமிழ் தமிழர் இயக்கம் தோழர் பரிதி, தமிழ்நீதி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் இராசேந்திரன், வழக்கறிஞர் பகத்சிங், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழ்ப்புலிகள் அமைப்புத் தோழர் பேரறிவாளன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு உரையாற்றினார். .தே.பொ.. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .ஆனந்தன் உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். மேநாள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவாளன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் ராஜா, மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. குமரேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ...பே. அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் செம்பருதி உள்ளிட்ட திரளான .தே.பொ.. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.

திருச்சி

திருச்சி காதிகிராப்ட் சந்திப்பு அருகில் மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் .பானுமதி தலைமையேற்றார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் நிலவழகன், புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் தோழர் .ஐயப்பன், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஆரோக்கியசாமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் சினி விடுதலைஅரசு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. கலியப்பெருமாள், பெரியார் பாசறை தோழர் அன்பழகன், தமிழ்நாடு மக்கள் கட்சி வழக்கறிஞர் கென்னடி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்புக் குழு உறுப்பினர் கவிஞர் இராசாரகுநாதன், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் தோழர் பிரபு, தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்புத் தோழர் வெங்கடேசன், தோழர் வெட்டுபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாநகரச் செயலாளர் தோழர் .கவித்துவன் , தோழர் வெ..லட்சுமணன் ஆகியோர் உரையாற்றினர்.

( செய்தி : த,தே.பொ.க.செய்திப் பிரிவு)



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT