உடனடிச்செய்திகள்

Friday, October 4, 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! தோழர் தியாகு உண்ணாப்போராட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர்கள் நேரில் சென்று ஆதரவு!



தமிழீழத் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தக்கூடாது, அவ்வாறு நடைபெற்றால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற அனுமதியோடு 01.10.2013 அன்று மாலை முதல் தொடங்கியுள்ளார். 


சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013) மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.


போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய தோழர் கி.வெங்கட்ராமன், இப் போராட்டம் தமிழகமெங்கும் விரிவுபட வேண்டுமென சுட்டிக்காட்டிப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் த.இ.மு. செயலாளர் தோழர் கோ.நல்லன், தோழர்கள் கவிபாஸ்கர், முத்துக்குமார், அர.குமரேசன், புதுமொழி, செம்மொழி, கடாபி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.


காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என போராடுவோம்! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, இன்று(03.10.2013) மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான த.தே.பொ.க. தோழர்கள் அவரை நேரில் சந்தித்தனர். 

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றிய தோழர் கி.வெங்கட்ராமன், இப் போராட்டம் தமிழகமெங்கும் விரிவுபட வேண்டுமென சுட்டிக்காட்டிப் பேசினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் த.இ.மு. செயலாளர் தோழர் கோ.நல்லன், தோழர்கள் கவிபாஸ்கர், முத்துக்குமார், அர.குமரேசன், புதுமொழி, செம்மொழி, கடாபி உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் இதில் பங்கேற்றனர். 

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே என போராடுவோம்! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க வேண்டுமென குரல் கொடுப்போம்!




(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT