உடனடிச்செய்திகள்

Sunday, March 12, 2017

மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் . . .பெ. மணியரசன் பங்கேற்பு..!

மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்பு..!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, இராமேசுரம் - தங்கச்சி மடத்தில் மீனவர்களின் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று (12.03.2017) பிற்பகல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழா பெ. மணியரசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டப் பந்தலில் உரையாற்றினார். மீனவர் பிரிட்சோவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மதுரை இரெ. இராசு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இலெ. இராமசாமி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தோழர்கள் கரிகாலன், சிவா, தங்கப்பழனி, நாடக வினோத் உள்ளிட்டோர் பேரியக்கத் தோழர்களும் உடன் வந்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT