உடனடிச்செய்திகள்

Friday, January 26, 2018

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசயேந்திரர் உருவப்படம் எரிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசயேந்திரர் உருவப்படம் எரிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த காஞ்சி சங்கர மட இளைய மடாதிபதி விசயேந்திரரைக் கண்டித்து, மொழிப்போர் நாளான 25.01.2018 அன்று காலை, தருமபுரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பல், விசயேந்திரர் உருவப்பட எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
 
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க தருமபுரி செயலாளர் தோழர் க. விசயன் தலைமை தாங்கினார். தோழர்கள் முருகேசன், பிரகாஷ் தங்கவேல் ஐயா, மதிமுக கோவிந்தராஜ், பச்சியப்பன், திருவள்ளுவன் உள்ளிட்டோர் பங்கேற்று, விசயேந்திரரின் தமிழ் பகைப் போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
 
காஞ்சி விசயேந்திரர் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென முழங்குவோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT