உடனடிச்செய்திகள்

Friday, August 10, 2012

நெய்வேலி அனல்மின் நிலையத் தலைமையகம் முற்றுகை த.தே.பொ.க தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது


காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்லக் கூடாது
நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகம் முன்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முற்றுகைப் போராட்டம்!
300 க்கும் மேற்பட்டோர் கைது


காவிரி  நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்லக் கூடாதென வலியுறுத்தி நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் முற்றுகையிட்டனர். 300க்கும் மேற் பட்டோர் கைது.

10.8.2012. இன்று காலை 10 மணி அளவில் நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமைகத்தை நோக்கி  பெருந்திரளானத் தோழர்கள்  “அனுமதியோம்! அனுமதியோம்! காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை அனுமதியோம் ! என உணர்ச்சிப் முழக்கமிட்டவாறு , தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் பெரும் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

ஆவேச முழக்கத்தோடு தலைமை நிறுவனத்தை முற்றுகையிடும் நிலையில், காவல் துறையினர்  இடைமறித்தனர்.  காவல்துறையினருடன் த.தே.பொ.க தோழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் பல தோழர்கள் உணர்ச்சி முழக்கமெழுப்பி  தலைமையகத்தை நோக்கி முன்னேறிச்  சென்றனர். பிறகு காவல்துறையினர் தலைமை நிலைய வாயிலில்  300க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தனர்.

பெண்கள், இளைஞர்கள் என பெருந்திரளாகக் கூடிய இந்த முற்றுகையில் த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் குழ.பால்ராசு, ஓசூர் மாரிமுத்து, பழ.இராசேந்திரன், பா.தமிழரசன், க.அருணபாரதி, ஆ.ஆனந்தன், தமிழக இளைஞர்முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் மா.கோ.தேவராசன், மு.தமிழ்மணி, ஈரோடு இளங்கோவன், இராசுமுனியாண்டி (தஞ்சை நகரச்செயலாளர், த.தே.பொ.க), பெண்ணாடம் முருகன், ஓசூர் நடவரசன், க.ரா. முத்துச்சாமி (திருப்பூர் இயற்கை வாழ்வகம்) இராசையா உள்ளிட்ட திரளான தோழர்கள் கைதாயினர்.


             (செய்தி த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் அரவிந்தன்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT