உடனடிச்செய்திகள்

Saturday, February 17, 2018

தமிழர் மீதான இனவெறியே காரணம்!

தமிழர் மீதான இனவெறியே காரணம்!
காவிரிச் சிக்கலில் தமிழினம் துரோகத்தை மட்டுமே சந்திப்பதற்குக் காரணம், தமிழர் மீதான இனவெறியே தவிர தேர்தல் கணக்கு அல்ல!

கர்நாடகத்தைவிடக் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட - மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அதைவிடக் குறைவாகவுள்ள கர்நாடகத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என இந்திய அரசும், இந்தியக் கட்சிகளும், இந்திய ஊடகங்களும், இந்திய நீதிமன்றங்களும் கருதுவதற்கு அடிப்படைக் காரணம் - தமிழர் மீதான இனவெறியே ஆகும்!
இந்திய - கர்நாடக இனவெறியை மறைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலே இதற்குக் காரணம் என்று மடைமாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலே இல்லாத போது தமிழர் மீது தாக்குதல்களும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து அடாவடித்தனத்திலும் இந்திய - கர்நாடக அரசுகள் ஈடுபட்டன; ஈடுபட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட்டுகள்தான் காரணம் என்று மடைமாற்றம் செய்கின்றனர். சென்னையை சூழ்ந்துள்ள கார்ப்பரேட்டுகளைவிடவா பெங்களுருவில் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர்?
இக்காரணங்களையெல்லாம்விட முதன்மைக் காரணம் - தமிழர் மீதான இந்திய - கர்நாடக இனவெறிப் பகையே! அதுவே, காவிரிச் சிக்கலில் நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு அடிப்படைக் காரணம்!
இனியும் இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் ஏமாறக் கூடாது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT