உடனடிச்செய்திகள்

Saturday, February 17, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
காவிரி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சில விவசாய சங்கத் தலைவர்களும், சில ஊடகங்களும் பொய்யாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

சென்னையில் இன்று காலை நடந்த காவிரி உரிமைப் போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன், உண்மை என்ன என்பதை விளக்கினார்.

காவிரித் தீர்ப்பின் 457ஆவது பக்கத்திலுள்ள 403ஆவது பத்தியில், தெளிவாகக் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல் - ஆறு வாரங்களுக்குள் ஒரு திட்டம் ( A SCHEME) நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும், அதையே, தமிழக முதல்வர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின் பக்கம் 11இல் உறுதிப்படுத்தியுள்ளதையும் தோழர் பெ.மணியரசன் அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் இந்திய அரசு, அதிகாரமில்லாத ஒரு மன்றத்தை ஏற்படுத்திவிட்டு, ஒரு போலித் திட்டத்தை முன்வைத்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாகத் காவிரித் தண்ணீர் கிடைக்காமலிருக்க முயற்சிக்கலாம் என்றும் அவர் ஐயம் வெளியிட்டார். தெரிந்தோ தெரியாமலோ தீர்ப்பை மொட்டையாக வரவேற்பது இனத்துரோகம் என்றார்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT