உடனடிச்செய்திகள்

Saturday, March 30, 2019

தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறக் கூடாது! தோழர் பெ. மணியரசன்.

தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை தவறக் கூடாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – மாத இதழில் (2019 ஏப்ரல்) வந்து கொண்டிருக்கும் “நிகரன் விடைகள்” பகுதியில் சின்னங்கள் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாட்டுடன் செயல்படுவது குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், இதழாசிரியருமான ஐயா பெ. மணியரசன் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் எழுதியிருப்பதாவது :

“நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிற்குத் தேர்தல் சின்னம் ஒதுக்கியதில் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட்டதாகத்தெரியவில்லை!

இந்திய ஆட்சியாளர்களின் தலையீடு தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் இருப்பது மோடி ஆட்சியில் அதிகரித்து விட்டது. காங்கிரசு ஆட்சியிலும் இந்தத்தலையீடு இருந்தது.

அரசமைப்புச் சட்டப்படி தன்னாட்சி பெற்றுள்ள நிறுவனங்களான உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் பொறுப்பு வகிப்போர்க்கு தற்சார்பும் தன்மான உணர்வும் கூடுதலாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு நடுநிலையுடன் செயல்படும் ஆளுமையைப் பெற வேண்டும்.

நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் அக்கட்சிகள் ஏற்கெனவே போட்டியிட்ட சின்னங்களை ஒதுக்குவதில் என்ன சிக்கல் உள்ளது? ஏன் இந்த இழுத்தடிப்பு?”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் எழுதியுள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT