உடனடிச்செய்திகள்

Tuesday, February 21, 2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு! - இன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்!

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு!

இன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்!


தமிழக அரசு செயல்படுத்தும் மின்சார மறுப்பைக் கண்டித்தும்நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குப் பெற வலியுறுத்தியும் இன்று(21.02.2012) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

 

தமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் இரத்து செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாளை(21.02.2012) தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறது. 

 

சென்னை

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நாளை(21.02.2012) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்குகிறார். தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் எழிலன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

சிதம்பரம்

சிதம்பரம் தெற்கு சன்னதி தெருவில் நாளை மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். ,தமிழக இளைஞர் முண்னணி மையக்குழு தோழர் பா. பிரபாகரன் தலைமை தாஙகுகிறார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

மதுரை

மதுரை பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்குகிறார். வைகை – மதுரை மாவட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளர் சங்கப் பொருளாளர் திரு இரா.பாஸ்கரன், மதுரை மாவட்ட பித்தளை பட்டறை உரிமையாளர் சங்கத் தலைவர் திரு சு.பாலகிருஷ்ணன், சில்வர் பட்டறை உரிமையாளர் சங்கச் செயலாளர் திரு மு. இராமு, தமிழ்நாடு தையல் தொழிலாளர் சங்கம் திரு க.அரசு, எவர் சில்வர் - பாலிஸ்டர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு இரா.பொருமாள், தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொருளாளர் திரு மு.ரெ.மாணிக்கம், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் இளமதி, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், தோழர் கதிர்நிலவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் தொ.ஆரோக்கியமேரி (இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மா.லெ.), தோழர் பா.இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச் சங்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு நிறைவுரை நிகழ்த்துகிறார். 

 

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து கண்டன உரை நிகழ்த்துகிறார்.

 

கோவை 

கோவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அருகில் மாலை 5.மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் மா.தளவாய் சாமி தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன், ம.தி.மு.க. தலைமைச் செயற்குழு  உறுப்பினர் தோழர் மு.கிருட்டிணசாமி, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

தஞ்சை நகரம்

தஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிகாநாதன், நகர துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

குருங்குளம்

குருங்குளத்தில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் முனியமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி மற்றும் தோழர் தனசேகர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

செங்கிப்பட்டி

தஞ்சை வட்டம் செங்கிப்பட்டியில் சாணுரப்பட்டி முதன்மைச்சாலை அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்குகிறார்.  தோழர் ஆ.தேவதாசு, ஒன்றியத் தலைவர்(த.இ.மு.), தோழர் கெ.செந்தில்குமார்(ஒன்றியச் செயலாளர், த.இ.மு.), தோழர் கெ.மீனா(மகளிர் ஆயம்), தோழர் ச.காமராசு, தோழர் ஆ.சண்முகம், தோழர் கு.சுப்பிரமணியன், தோழர் கோ.இரமேசு, தோழர் கருப்புசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

குடந்தை

குடந்தை காந்தி பூங்கா அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் ச.செழியன் தலைமை தாங்குகிறார். குடந்தைத் தமிழ்க் கழகச் செயலாளர் தோழர் சா.பேகன், வழக்கறிஞர் ரெ.சிவராசு (மாவட்டச் செயலாளர், த,இ.மு.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். 

 

பெண்ணாடம்

பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி தலைமை தாங்குகிறார். தோழர் க.முருகன் (த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்), தோழர் க. வள்ளுவன் (பொறுப்பாசிரியர், அக்னி சத்திரியன்), தோழர் தே.ச.பஞ்சநாதன் (மனித நேயப் பேரவை), தோழர் மா.தமிழ்மாறன் (திருவள்ளுவர் மன்றம்), தோழர் மு.இராமகிருஷ்ணன் (த.தே.பொ.க), தோழர் அரிகிருஷ்ணன் (த.தே.பொ.க), தோழர் சி.பிரகாசு (த.இ.மு), தோழர் அர.கனகசபை (த.தே.பொ.க), தோழர் இன்பத் தமிழன் (திருவள்ளுவர் தமிழ் மன்றம்), தோழர் பெரியார் செல்வம் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். தோழர் தனபாலன்(த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் பா.அரசு (ஒன்றியச் செயற்குழு), தோழர் சு.இரமேசு (நகரச் செயலாளர், த.தே.பொ.க), தோழர் ரெ.செயபாலன் (மன்னை பகுதி செயலாளர், த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

கீரனூர்

கீரனூர் கடைவீதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் சி ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். பொறிஞர் அகன்(பாவாணர் மன்றம்), தோழர் பெ.லெட்சுமணன், தோழர் சொ.சதா சிவம், தோழர் இராஜகுமார், தோழர் சா.பிரபு, தோழர் பார்த்திபன், தோழர் பெ.பாரதி, தோழர் இலெ.திருப்பதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்புரையாற்றுகிறார். 

 

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தேரடித் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் தமிழ்த் தேசியன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி, தோழர் துரை அரிமா(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் சு.க.மகாதேவன் (நாம் தமிழர்), தோழர் முத்துராசன் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

திருச்சி

திருச்சி தொடர் வண்டி நிலையம்(காதி கிராப்ட் அருகில்) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்குகிறார். திரு வீ.நா.சோமசுந்தரம், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி, தோழர் வே.பூ.ராமராஜ், தோழர் க.ஆத்மநாதன், தோழர் சத்யா, தோழர் முகில் இனியன், தோழர் வே.க.லட்சுமணன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

தமிழக மக்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இன்று (21.2.2012) செவ்வாய்க்கிழமை நடத்தும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT