உடனடிச்செய்திகள்

Wednesday, July 4, 2012

செங்கல்பட்டு ‘சிறப்பு முகாம்’முற்றுகை போராட்டம் !


செங்கல்பட்டு சிறப்பு முகாம்முற்றுகை போராட்டம் !

செங்கல்பட்டு பூந்தமல்லி பகுதிகளில் சிறப்பு முகாம்என்ற பெயரில், வழக்கு முடிந்த பின்னரும் கூட சிறைபடுத்தி வைத்திருக்கும் தமிழீழத் தமிழர்களை, தமிழக அரசு ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (30.06.2012) காலை பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட செங்கல்பட்டு சிறப்பு முகாம்முற்றுகை போராட்டம் நடைபெற்றது.


செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்ட தோழர்கள் சிறப்பு முகாமை நோக்கி முழக்கங்களுடன் சென்றனர். தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


முற்றுகைப் போராட்டத்தை இயக்குநர் புகழேந்தி ஒருகிணைத்தார், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் தீரன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், பெரியார் தி.க. காஞ்சிமாவட்ட செயலாளர் டேவிட்பெரியார், திரவிட இயக்கத் தமிழர் பேரவை சிங்கவராயன், தமிழக பெண்கள் செயற்களம் ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் கயல்விழி, தோழர் தியாகு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் இதில் திரளாக பங்கேற்றனர்.




தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் கிளை செயலாளர் தோழர் தமிழ்க்கனல், குன்றத்தூர் தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் தோழர் சரவணன், கிளைச் செயலாளர் தோழர் சியாம், தோழர் தமிழ்ச்சமரன் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


விடுதலை செய்” “விடுதலை செய்” “ஈழத் தமிழர்களை” “விடுதலை செய்என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


(செய்தி த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: மா.பாலா)


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT