உடனடிச்செய்திகள்

Friday, March 29, 2013

கல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடும் கண்டனம்!


கல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கடும் கண்டனம்!


கல்பாக்கத்தில்தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசுக் காவல்துறைகொடும் அடக்கு முறைகளை ஏவியுள்ளது கண்டிக்கத்தக்கது.

கல்பாக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டு செயலில் உள்ள அணுஉலைகளிலிருந்து தடையில்லா மின்சாரம் வேண்டும்இலவசமான சுகாதாரமான குடிநீர் வேண்டும்,கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பிலும்கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்இந்திய அரசால் எங்கிருந்தோ கொண்டு வரப்படுகின்றகதிரியக்கம் கொண்ட அணுக்கழிவுகளை கல்பாக்கத்தில் சேமிக்கக் கூடாதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அணுக்கதிரியக்கத்தின் தாக்கத்தைக் கண்டறியும் வசதிகள் கொண்டபன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும்புதிய அணுஉலைகளை கல்பாக்கத்தில் நிறுவக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம்அணுஉலையைச் சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம்பட்ராஸ்புதுப்பட்டினம்ஒய்யாரி குப்பம்கொக்கிளமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறுபோராட்டங்களி்ல் ஈடுபட்டு வந்தனர்.

26.03.2013 அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேரெழுச்சியுடன் திரண்ட 3000க்கும் மேற்பட்ட மக்கள் முதல் அணுமின் நகரியம் வாயிலை அமைதியான வழியில் முற்றுகையிட்டனர்காலையில் தொடங்கிய மறியல் போராட்டம் மாலை வரை நீடித்ததுகிராம மக்கள் சார்பில் ஊர் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள்மீனவர்கள் மற்றும் தொண்டுநிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுமாவட்ட வருவாய் அதிகாரி(ஆர்.டி..), தாசில்தார் முன்னிலையில் அன்று மாலை அணுமின் நிர்வாகத்துடன்பேச்சுவார்த்தை நடத்தியதுகோரிக்கைகளை பரிசீலிப்பதாக வாய்மொழியில் அணுமின் நிர்வாகம் கூறியதைபோராட்டக் குழுப் பிரதிநிதிகள் ஏற்கவில்லைஎழுத்து மூலம்உத்தரவாதம் அளிக்கக் கோரியதையும் அணுமின் நிர்வாகம் ஏற்கவில்லைஎழுத்து உத்தரவாதம் கொடுக்கப் படவில்லையெனில் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவோம்என போராட்டக் குழுவினர் எச்சரித்துவிட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்துமறுநாளான 27.03.2013 அன்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான மக்களை காவல்துறையினர் வழிமறுத்துத் தடுத்தனர்.அங்கு அறவழியில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறை கொடுமையான முறையில் தடியடி நடத்தியதுஅதில், 22 பேர்வரை காயமுற்றனர். 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்தடியடியைக் கண்டித்து, காவல்துறையிடமும் அணுமின் நிர்வாகத்திடமும் முறையிட்ட 30 பேர்கொண்ட போராட்டக்குழுவினரில், 18 பேர் தடியடியை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தானே முன்வந்து கைதாயினர்அதில்நால்வர் தடியடியில் கடுமையாகக்காயமுற்றிருந்தனர்.

இந்நிலையில்கைதான 18 பேரை விடுவிக்கக் கோரி கல்பாக்கம் பகுதியைத் துண்டிக்கும் வகையில் அனைத்து வழிகளிலும் மக்கள் அமைதியான வழியில் சாலை மறியலில்அமர்ந்தனர்இந்நிலையில்போராட்டக் குழுவினரிடம் கடிதம் ஒன்றை அளித்த அணுமின் நிர்வாக இயக்குநர் கோட்டீசுவரன்மக்கள் கோரிக்கைகள் சிலவற்றைப்பரிசீலிப்பதாகவும்புதிய அணுஉலைகள் அமைக்கும் முடிவு இந்திய அரசிடம் தான் உள்ளதெனவும் தெரிவித்தார்எனினும்கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவிக்கக் கோரிநள்ளிரவு 12 மணி வரை சாலை மறியல் தொடர்ந்தது.

இந்நிலையில்கைதான 18 பேர் மீது கொலை முயற்சி (..பிரிவு 307) உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. காவல்துறையினரின் இந்தஅடக்குமுறையைக் கண்டித்தும், 18 பேரை விடுவிக்கக் கோரியும் 28.03.2013 அன்று கல்பாக்கத்தில் மக்கள் நடத்தவிருந்த உண்ணாப் போராட்டத்திற்கும் அனுமதிமறுக்கப்பட்டதுதடையை மீறி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில், 130 பெண்கள் மற்றும் 440 ஆண்கள் என மொத்தம் 670 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களில் ஆண்கள் 440 பேரைத் தவிர்த்துபெண்களை இரவு 9 மணிக்கு விடுவித்தனர்.

ஆண்கள் அனைவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் காவல்துறை திட்டமிட்ட நிலையில்அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பினஇதனையடுத்து, ஒவ்வொருகிராமத்திற்கும் 2 பேர் என போராட்டத்தில் முன்னிலை வகித்த 27 பேரையும்அதன் பின் 102 பேரையும் சேர்த்த மொத்தமாக 129 பேரை நீதிமன்றக்காவலில் சிறைக்குஅனுப்பியுள்ளது காவல்துறை. 27 பேரை சென்னை - புழல் நடுவண் சிறைக்கும்எஞ்சிய 102 பேரை வேலூர் நடுவண் சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும்அப்பகுதியைச் சேர்ந்த எளிய கிராம மக்கள் ஆவார்கள்இவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததுஅரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததுகலவரத்திற்கு வித்திட்டது என பிணையில் வர முடியாத பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் எங்குமே நிறுவப்படாத வி.வி..ஆர்.(VVER) எனப்படும் புதிய அணுத் தொழில்நுட்பத்தில் தான் கல்பாக்கம் அணுஉலை செயல்பட்டு வருகின்றதுஅப்பகுதி மக்கள்,செயல்பட்டு வரும் அணுஉலையை மூட வேண்டுமெனக் கோரவில்லைஅதிலிருந்துமின்சாரம் வேண்டுமென்றும்புதிய அணு உலைகளை நிறுவ வேண்டாம் என்றும், ஆபத்தான அணுக்கழிவுகளை எங்கிருந்தோ கொண்டு வந்து கல்பாக்கத்தில் வைக்க வேண்டாம் என்றும் தான் அறிவுறுத்துகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்குசிலசலுகைகள் வேண்டுமென்று தான் போராடுகின்றனர்.

ஆனால்அவர்கள் மீது இவ்வளவுக் கொடிய அடக்குமுறைகளை ஏவ வேண்டிய அவசியமென்ன? அணுஉலைகளால் மின்சாரச் சிக்கல் தீர்ந்துவிடும் என்று அரசும்ஊடகங்களும்பரப்புகின்ற பொய்ச் செய்திகளை கல்பாக்கம் மக்களின் போராட்டம் தகர்த்தெறிந்துள்ளது தான் இதற்கக் காரணமா?

இந்திய அரசின் கல்பாக்கம் அணுமின் நிலையம்அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லையெனில்அதை தமிழக அரசு தான் தட்டிக்கேட்டுநிறைவேற்றிவைக்க வேண்டும்ஆனால்மக்களுக்கு எதிராக காவல்துறையை ஏவி ஒடுக்குவது எவ்வகையிலும் நியாமல்ல.

எனவேதமிழக அரசுகைதுசெய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்மக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறைஅதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மக்கள் கோரிக்கைகளை அணுமின் நிலைய நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லையெனில்கல்பாக்கம் அணுமின்நிலையத்தை செயல்பட அனுமதிக்க முடியாதென இந்திய அரசுக்குதமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT