உடனடிச்செய்திகள்

Wednesday, September 20, 2017

ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் “தமிழர் மீட்சி” இனமுழக்கம் - சிறப்புக்கூடல்!

ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் “தமிழர் மீட்சி” இனமுழக்கம் - சிறப்புக்கூடல்!
1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 40ஆம் நினைவு நாள் நாளையொட்டி (21.09.2019), அவரது நினைவேந்தல் நிகழ்வு மற்றும் “தமிழர் மீட்சி” - இன முழக்கம் பரப்புரைக்கான சிறப்புப் பொதுக்கூடல், நாளை (செப்டம்பர் 21) தஞ்சையில் நடக்கிறது.

ஈகி வெங்கடாசலம் அவர்கள், தஞ்சை வட்டப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் தனிச்சிறப்பானவை! அவர் 1977 செப்டம்பர் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.

தீண்டாமை சாதி ஆதிக்க ஒழிப்பு - உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் - அரசியலில் உள்ள ஊழலை எதிர்த்துச் சமர்புரிவது - காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடுவது என நான்கு தளங்களில்போ பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் ஈகி வெங்கடாசலம் ஆவார்.

1970-71 ஆம் ஆண்டுகளில் உழவுத் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது. நடவு நடும் பெண்களுக்கு மூன்று ரூபாய் கூலி, உழவு உழும் ஆண்களுக்கு 4 ரூபாய் கூலி. கூலி உயர்வு கேட்டு உழவுத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார் ந.வெ. அவரது நினைவுகளைப் போற்றி, நன்றி செலுத்துவது மக்கள் கடமையாகும்!

அவ்வகையில், தஞ்சை மாவட்டம் - பூதலூர் ஒன்றியம் ஆச்சாம்பட்டியில் நாளை (21.09.2017) வியாழன் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஈகி ந.வெ. நினைவேந்தல் மற்றும் தமிழர் மீட்சிப் பரப்புரை நிகழ்வுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்குகிறார்.

பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, தோழர் பழ. இராசேந்திரன், தோழர் க. விடுதலைச்சுடர், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் தோழர் பெ. கோபால் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT