உடனடிச்செய்திகள்

Friday, February 20, 2009

ஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 120 பேர் கைது

ஈரோட்டில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 120 பேர் கைது

    ஈரோட்டில் மத்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 120க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.30 மணியளவில் ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ச.அர.மணிபாரதி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் குழந்தைகளும், பெண்களுமாக பெரும் திரளில் கலந்து கொண்டனர். "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பன்னீர் செல்வம் புங்காவிலிருந்து ஊர்வலமாக  புறப்பட்ட தோழர்கள் 120 பேரை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 6 குழந்தைகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT