உடனடிச்செய்திகள்

Friday, May 4, 2012

மே நாள் உழைக்கும் மக்களின் நாள் மட்டுல்மல்ல! ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் விடுதலையை சூளுரைக்கும் நாள் - பெ.மணியரசன் பேச்சு

"மே நாள் உழைக்கும் மக்களின் நாள் மட்டுல்மல்ல!

ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் விடுதலையை சூளுரைக்கும் நாள்"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

 

"மே நாள் உழைக்கும் மக்களின் நாள் மட்டுல்மல்ல! ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள் விடுதலையை சூளுரைக்கும் நாள்" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார். மே 1 உழைப்பாளர் நாளை தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கொண்டாடியது.

 

சென்னை

சென்னையிலுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமை அலுவலகம் அருகில் நடைபெற்ற விழாவில், த.தே.பொ.க. கொடியேற்றி வைத்தார் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன். அப்போது பேசிய அவர், "1886இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில், உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் துப்பாக்கியால் சுட்டும், தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டார்கள். அவர்களது ஈகத்தின் விளைவாக 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என உரிமைகள் அளிக்கப்பட்டு தொழிலாளர்களின் சுரண்டல்களுக்கு வரம்புகட்டப்பட்டது. ஆசியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக மே நாள் கொண்டாடப்பட்டது. அதைக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். முற்போக்குக் கருத்துகளை வெகு வேகத்தில் ஈர்த்துக் கொள்ளும் இனம் தமிழினம் என்பதற்கு இதுவொரு சான்று. அப்படியான தமிழகம் இன்று அயலாருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பெரும்பாலும், பன்னாட்டு முதலாளிகளாகவும், வடநாட்டவர்களாகவும் வேற்றினத்தவர்களாகவுமே உள்ளர். தமிழகத்திற்குள் உள்ள தமிழர்களால் தமிழ் மக்களின் உழைப்புச் சுரண்டப்படுவது மிகவும் குறைவுதான் எனினும், அதனை சரி செய்து கொள்ள முடியும். அதற்கு முன், அயலாரின் உழைப்புச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது நம் கடமை. மே 1 தொழிலாளர் தினத்தை வெறும் உழைக்கும் மக்களுக்கான நாளாக மட்டும் கருதக்கூடாது. இந்நாள் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்கள் உரிமைகளை வெல்வதற்கு சூளுரை மேற்கொள்ளும் நாள் என நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

 

விழாவிற்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயமூர்த்தி, அருணபாரதி, தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

 

திருத்துறைப்பூண்டி

மன்னார்குடி வட்டம் கோட்டூர் கடைத் தெருவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் காலை 9 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற விழாவிற்கும், காலை 11 மணியளவில் திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கும் த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர்  அ.தனபால் தலைமையேற்றார். இந் நிகழ்வில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு த.தே.பொ.க. கொடியேற்றி வைத்தார். த.தே.பொ.க தோழர்கள் க.அரசு, இ.தனஞ்செயன், க.பாலசுப்ரமணியன், கை.செ.குமார், நகர செயலாளர் தோழர் து.ரமேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

வேதாரணியத்தில் உப்புத் தொழிலாளர் பேரணி

வேதாரணியம் வட்டம் பன்னாள் பள்ளிக்கூடம் அருகிள் மே 1 மாலை 6 மணிக்கு தொடங்கிய உப்புத் தொழிலாளர்ப் பேரணி கடினல் வயல் ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலை வாயிலை அடையும் போது இரவு 11 மணி.

 

விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் நட்த்திய இந்த எழுச்சிமிகு மே நாள் பேரணிக்கு சங்கத்தின் தலைவரும், த.தே.பொ.க. பொதுச்செயலாளருமான தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். பேரணியின் தொடக்கத்தில் பன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.ஏ.கே.விசுவநாதன், துணைத் தலைவர் திரு.கே.சண்முகசுந்தரம், ஆசிரியர் சகன்நாதன், கடினல் வயல் ஊராட்சிமன்றத் தலைவர் திரு தமிழ்ழகன், வேதாரணியம் ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.இராசசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

தஞ்சை செல்வராசு குழுவினரின் நாட்டுப்புற நடனக்குழுவின் கலை நிகழ்ச்சியோடு நடைபெற்ற இப் பேரணியை விம்கோ உப்புத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர் இரா.தியாகராசன், துணைச் செயலாளர் தோழர் வாசுதேவன், பொருளாளர் தோழர் இளங்கோவன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நெறிப்படுத்தினர்.

 

கிராமச்சாலைகள் வழியாகவே சுமார் 5 கி.மீ நடைபெற்ற இப்பேரணியில் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களுமாக 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணிப் பாதை நெடுகிலும் சங்க உறுப்பினர் குடுபங்களை சேர்ந்தவர்களும், ஓய்வு பெற்றத் தொழிலாளர்களும் கூடி நின்று குளிர்பானம் அளித்தும், தேனீர் வழங்கியும் தோழர் கி.வெ அவர்களுக்கு ஆடை அணிவித்தும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

 

பேரணி நிறைவில் சங்க கொடியை தோழர் கி.வெங்கட்ராமன் ஏற்றிவைத்து மே நாள் உரை நிகழ்த்தினார். ஒன்றிய கவுன்சிலர் திரு இராசசேகர், கடினல் வயல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருமதி தனலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் தோழர் தியகராசன் நன்றி நவின்றார்.

 

தஞ்சை நகரம்

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் காலை 9 மணியளவில் மே நாள் கொடியேற்று விழா நகர செயளாலர் இரா.சு.முனியாண்டி தலைமையில் நடைபெற்றது தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கட்சி கொடியேற்றிவைத்து சிறப்புரையாற்றினார் . அதனைத்  தொடர்ந்து த.தே.பொ.க தோழர்கள்  இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று மருத்துவக் கல்லூரி, கலைஞர் நகர், முனியாண்டவர் காலனி, பூக்கார லாயம், கோரிக்குளம், ரெங்கநாதபுரம், இந்திரா நகர், அண்ணா நகர் 7ஆம் தெரு, முதல் தெரு, வடக்குவாசல், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கொடியேற்ற விழாக்கள் நடைபெற்றன. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், நா.வைகறை நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் அங்கங்கே கட்சி மற்றும் த.இ.மு கொடியேற்றி வைத்தனர்.

 

தஞ்சை ஒன்றியம்

தஞ்சை ஒன்றியம் வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் மே நாள் கொடியேற்று விழா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன் தலைமையில் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடியேற்றி மே நாள் உரைநிகழ்த்தினார்.

 

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை வட்டம் பூதலூர் இரயிலடியில் காலை 8 மணியளில் நடைபெற்ற, மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு தோழர் ரெ.கருணாநிதி, த.இ.மு. செயலாளர் தோழர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் வீரப்புடையான்பட்டி, முத்துவீரக்கண்டியம்பட்டி, நந்தவனப்பட்டி, புதுப்பட்டி, கக்கனூர், மனையேறிப்பட்டி, வெண்டையம்பட்டி, புதுக்குடி, புதுக்குடி முதன்மைச்சாலை, காமாட்சிபுரம், சமத்துவப்புரம், வளம்பக்குடி, காதாட்டிப்பட்டி, துருசுப்பட்டி, நண்டப்பட்டி, பாலையப்பட்டி, ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, வன்னிப்பட்டி, செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களில் தொடச்சியாக மாலை வரை கட்சிக் கொடியும், தமிழக இளைஞர் முன்னணி கொடியும் ஏற்றப் பட்டு மே நாள் தெருமுனைக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைப் பெற்றன.

 

நிறைவில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற சாணுரப்பட்டி தானிஓட்டுனர் சங்க மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, சங்கச் செயலாளரும் த.இ.மு. பொறுப்பாளருமான தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையேற்றார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி கொடியேற்றி வைத்து, அங்கு நடைபெற்ற த.தே.பொ.க. பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கருப்பசாமி, தோழர் இரமேசு, தோழர் கு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மதுரை

மதுரை மாநகர் செல்லூர் - தாகூர் நகரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க  தோழர் மு.அழகர்சாமி தலைமையேற்றார், பா.இராசேந்திரன் (சித்திரைவீதி தானி ஓட்டுனர் சங்கச்செயலாளர்) அவர்கள் கொடியேற்றி வைத்து  கருத்துரை வழங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஆ.அனந்தன், தமிழக மகளிர் ஆயம் ஒருகிணைப்பளர் தோழர் அருணா, மதுரை மக்கள் உரிமை பேரவை அமைப்பாளர் வழக்குரைஞர் சு.அருணாசலம், வழக்குறைஞர் மணி, த.தே.பொ.க மதுரை செயலாளர் தோழர்.ரெ.இராசு உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். சித்திரை வீதி தானி ஓட்டூனர்களும் பொதுமக்களும் திராளானோர் கலந்துக் கொண்டனர்.

 

கோவை

கோவை பேரூர் சாலையிலுள்ள செட்டி வீதி அசோக்நகர் பகுதியில், காலை 10 மணியளவில் நடைபெற்ற மே தின கொடியேற்று விழாவிற்கு தமிழக இளைஞர் முன்னணி பெரியக்கடை வீதி கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன் தலைமையேற்றார், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கரவடிவேல் த.தே.பொ.க கொடி ஏற்றினார். தோழர்கள் பிறை.சுரேசு, கு.இராஜேஷ்குமார், சு.மாரியப்பன் உள்ளிட்ட த.தே.பொ.க தோழர்களும், த.இ.மு. தோழர்களும் கலந்து கொண்டனர். மே நாள் போராளிகளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு விடுதலை பெறுவோம்!! வெளியாரை வெளியேற்றுவோம்!!! உள்ளிட்ட முழக்கங்கள் அந்தப் பகுதியின் அனைவரின் கவனத்தை ஈர்த்தது..

 

காலை 11.30 மணியளவில் எல்.ஐ.சி. குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, செல்வபுரம் த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிறை.சுரேசு தலைமைஏற்றார் த.இ.மு. கொடியை தோழர் பா.சங்கரவடிவேல் ஏற்றினார். தோழர் கு.இராசேசு, இரா.கண்ணன், சு.மாரியப்பன், ஜா.ஸ்டீபன், மா.தளவாய்சாமி உள்ளிட்ட கட்சித் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் காலை 8.30 மணியளவில் நடந்த கொடியேற்று விழாவிற்கு, த.தே.பொ.க. மூத்த உறுப்பினர் தோழர் மு.முருகவேள் தலைமை தாங்கினார், த.தே.பொ.க.நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கட்சி கொடியேற்றினார்.கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ம.கோ.தேவராசன், த.இ.மு. அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பா.பிரபாகரன், தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா, செயலாளர் செ.செயப்பிரகாசு மற்றும் த.தே.பொ.க தோழர்களும் த.இ.மு தோழர்களும் அப் பகுதி மக்களும் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சியம்மன கோயில் வீதியில் காலை 9 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவில்,  த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் குமரேசன் த.தே.பொ.க கொடியேற்றி சிறப்புரை வழங்கினார் த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா கருத்துரை வழங்குகின்றனர். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

 

பரமக்குடி

பரமக்குடியில் காலை 11 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் தலைமையேற்று த.தே.பொ.க கொடியேற்றினார்.

 

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் முருகங்குடி பகுதிகளில் மே 1 மாலை நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவில் த.தே.பொ.க தோழர் கனகசபை தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க கொடியேற்றி மே நாள் சிறப்புரையாற்றினார் ஆசிரியர் பழனிமாணிக்கம், த.தே.பொ.க பொதுக் குழு உறுப்பினர் தோழர் மு.முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர் த.இ.மு தோழர் பிரகாசு நன்றியுரையாற்றினார்.

 

ஓசூர்

ஓசூர்  ராம் நகரியில் உள்ள த.தே.பொ.க கட்சிக் கொடியை த.தே.பொ.க தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் தோழர் நடவரசு தலைமையேற்றார். தோழர் ஸ்டாலின் நன்றியுரையாற்றினார்.

 

திருச்சி

திருச்சிமாவட்டம் துவாக்குடியில் அண்ணா வளைவில் காலை 9 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவிற்கு செயலாளர் தோழர் வே.க.லெட்சுமணன் தலைமைதங்கினார் பாவலர் முவ.பரணர் த.தே.பொ.க கொடியை ஏற்றினார். வழக்கறிஞர் தோழர் த.பானுமதி சிறப்புரையாற்றினார் தமிழ் கலைஇலக்கிய பேரவை தலைவர் இரெ.சு.மணி, தமிழ் கலைஇலக்கியப் பேரவை செயளாலர் ந.ராஜாரகுநாதன், தோழர் இனியன், தோழர் ஆத்மநாதன், திருச்சி செயளாலர் தோழர் கவித்துவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர் முன்னதாக ஈகவஅரசன் எழுச்சிப் பாடல் பாடினார்.

 

திருச்சி விமான நிலைத்தில் காலை 10.30 மணியலவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவிற்கு தோழர் இனியன் தலைமைதாங்கினார் தமிழ் கலைஇலக்கியப் பேரவை தலைவர் இரெ.சு.மணி த.தே.பொ.க கொடியேற்றினார். வழக்கறிஞர் தோழர் த.பானுமதி சிறப்புரையாற்றினார்.

 

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடைத் தெருவில் மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற மே நாள் கொடியேற்று விழாவில் த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி கொடியேற்றி உரை நிகழ்த்தினார் விழாவில் த.தே.பொ.க தோழர்கள் உச்சிராசு, தோழர் தமிழ்த்தேசியன், தமிழரும்பு, சபரிவாசன், தோழர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

இடம்: சென்னை

 
 

 

 

 


தலைமைச் செயலகம்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT