உடனடிச்செய்திகள்

Monday, May 14, 2012

கூடங்குளம் அணுஉலை: மாற்று கருத்து மேலாண்மை நிறுவ நாமே ஊடகமாக மாறவேண்டும் -கி.வெங்கட்ராமன் பேச்சு!


"மாற்று கருத்து மேலாண்மை நிறுவ நாமே ஊடகமாக மாற வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இடிந்தகரையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும், போட பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் ,சிறையில் இருக்கின்ற தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பரிமளா, சமந்தா, ஜார்ஜ் மற்றும் ஜான்சன் ஆகியோர் 100 ம்ணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மூன்றாம் நாளான நேற்று(14.05.2012) மாலை ம.தி.மு.க கவிஞர் மணிவேந்தன், இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் குமரேசன், பேராசிரியர் சிவக்குமார், சிபிஐஎம்எல் மக்ரேஷ், எம்.ஆர்.எப் தொழிற்சங்கம் சிவப்பிரகாஷ், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன், தமிழ்த் தேசப்  பொதுவுடைமை கட்சி பொதுசெயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி பொதுசெயளாலர் கி.வெங்கட்ராமன் அவர்கள் பேசிய போது.
கூடங்குளம அணுமின்நிலையத்தை முட வேண்டும் என்ற தொடர் போராட்டத்தின் ஒரு வடிவமாக அங்கே இடிந்தகரையில் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும். சிறையில் இருக்கின்ற தோழர்களை விடுதலை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக நம் மக்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்த வேண்டும். கோரிக்கைகளை முன் வைத்து இங்கு நான்கு பேர் 100 மணி நேர உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இந்த போரட்டத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைக்மை கட்சியின் சார்பில் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். இந்த போராட்டதிற்கு உறுதியான ஆதரவைத் தெறுவிக்கின்றேன். அரங்கத்தில் கூடியிருக்கின்ற தோழர்கள் இந்த போராட்டத்தில் அக்கரை உள்ளவர்கள் என்ற முறையில் சில கருத்துக்களை நாம் செய்ய வேண்டியதைப் பேச வேண்டும் என்று கருதுகிறேன்.

இந்தப் போராட்டத்தை சமநிலையில் இருந்து நாம் நடத்தவில்லை. அரசாங்கம் பொதுவானது அடக்கு முறை என்ற கருத்துகளுக்கு உள்ள சம வாய்ப்பு இந்த கருத்தை பேசுவதற்க்கு வழங்க பட வில்லை. அது கூடங்குளம் பிரச்சனை மட்டும் அல்ல, ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், காவிரிப் பிரச்சனை என்றாலும் சரி, எல்லா இடத்திலும் இதைத்தான் சந்தித்துத் கொண்டு இருகிறோம்.

மாவோயிஸ்ட் ஆயுதம் தாங்கி போரடினால் ஆட்சியாளரும், அவர்களை ஆதரிக்கிற ஊடகங்களும் என்ன சொல்கிறார்கள் அமைதி வழியில் பேசுங்கள் உங்களுடையக் கருத்தை மக்களிடையே சொல்லுங்கள் ஆயுதம் என்பது சரியன்று சட்ட விரோதமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். சரி அமைதிவழியில் சில கருத்துகளை சொல்லம் என்று சொன்னால் அதற்க்கான வாய்ப்பை அவர்கள் வழங்குவது இல்லை.

கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று அப்துல்கலாமுக்கு மட்டும் மல்லாமல் நாராயணசாமியும் சொல்லாம். ஆனால் கூடாங்குளம் வேண்டாம் என்று சொல்லமுடியாது. இனியன் என்ற குழுவை தமிழக அரசு நியமித்து இனியன் யார் என்று கேட்டால் அணு உலையை ஆதரவாகப் பேசிவருபவர் தான். தமிழக அரசு போரட்டக்குழுவிற்கு ஆதரவாக சட்டமன்றத்திலே சில திர்மாணம் போட்டது அதுவும் உள்ளாட்சி தேர்தல் இடை தேர்தல் வரையே. அப்போது கூட கூடங்குளம் அணுலைக்கு எதிராகப் பேச முடிய வில்லை.

கூடங்குளம் போராட்டனம் ஒரு நீடித்தப் போராட்டமாகத் தான் நடத்த முடியும். இதை சந்திபதற்கான வடிவம் தான் வேறு அரசியல் கட்சிகளை அணுகி மேடையில் பேச வைப்பதால் இப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர முடியாது.

இதையும் தாண்டி கருத்தியல் நிலவவேண்டும். இடிந்தகரையிலே போராட்ட பந்தலில் மக்களைத் திரட்டி நடந்து கொண்டு இருகிற போராட்டம் உலக அரங்கிலே ஒரு விவாதத்தையும் அழுத்ததையும் தருகிறது.

அதற்கெதிராக ஆட்சியாளர்கள் கூடங்குளம் இல்லை என்றால் தமிழ்நாடே இருண்டுவிடும் என்ற பரப்புரையை பரப்புகிறார்கள் .அதை முறியடிக்கும் விதமாக நாம், குழு குழு வாகப் பிரிந்து ஒரு கருத்தியலைப் பரப்ப வேண்டும் . இப்பொது இருக்கின்ற தகவல் தொழில் நுட்பதை பயன்படுத்தி நாம் அதைசெய்ய வேண்டும். இப்படி மாற்றுக் கருத்து மேலாண்மை நாம் நிறுவ வேண்டும்.

ஸ்பெயின் நாட்டில் பிரங்கோ என்ற சர்வாதிகாரி 40 ஆண்டுகளாக ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தார் அப்போது தங்கள் கட்சி நாளிதழை 1 லட்சம் பிரதிகளை விற்று கருத்துகளை பரப்பினர்.அதை போல நாம் ஊடகமாக வேண்டும் ஒரு ஊடகமாக செயல் பட வேண்டும்.

நெய்வேலி மின்சாரத்தை முழுவதும் தமிழ்நாட்டுக்கு கொடுத்தால் இப்பொழுது இருக்கிற பற்றாக்குறையில் 80 சதவிதம் சமாளிக்க முடியும்.பன்னாட்டு கம்பெனிக்கு கொடுக்முன் மின்சாரத்தை மக்களுக்கு கொடுத்தாளல் போது மானது.

கட்சி சாரா சிவில் கூட்டமைபபை கட்டமைபக்க வேண்டும். சிவில் கூட்டமைப்பு என்றால் தொழிற்சங்கங்கள் , வணிக சங்கங்கள் போன்றவைகள் கூட்டாகக் செயல் பட வேண்டும். மாற்று மின்சக்தியாக காற்றாலை, கதிரவன் மின்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். எனவே மாற்று கருத்து மேலாண்மை நிறுவ நாமே ஊடகமாக மாறவேண்டும் வேண்டும்” என பேசினார்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT