உடனடிச்செய்திகள்

Tuesday, November 28, 2017

“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை!” வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு! “தமிழக அரசியல்” வார ஏட்டில் செய்திக்கட்டுரை!

“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை!” வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு! “தமிழக அரசியல்” வார ஏட்டில் செய்திக்கட்டுரை!
 

தமிழ்நாடு அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர்களை விரிவுரையாளர்களாகப் பணியமர்த்துவதற்கு எதிரான தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம் குறித்து, “வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை! - வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு!” என்ற தலைப்பில், 29.11.2017 நாளிட்ட “தமிழக அரசியல்” வார ஏட்டில், செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

“பாலிடெக்னிக் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் 23.11.2017 அன்று சென்னையிலுள்ள தரமணியில், நடுவண் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் என்று அரசு சார்பில் அறிவிப்பும் வந்தது.

அக்கட்டுரையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதியின் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. “சில நாட்களுக்கு முன்பு அரசு சார்பில் எங்களிடம், நீங்கள் இப்படி கூட்டம் நடத்தக்கூடாது என்றார்கள். அதற்கு நாங்கள், முற்றுகையாகவோ ஆர்ப்பாட்டமாகவோ செய்யப்போவதில்லை. பாதிக்கப்படும் மாணவ சமுதாயம் ஒன்று திரள்வார்கள் என்று சொன்னோம்.


இந்த விஷயத்தில் மாணவர்களிடம் பெருகிவரும் ஆதரவைப் பார்த்த அரசாங்கம், கடந்த 21-ஆம் தேதி மாலை ஆறு மணியளவில், இந்த சான்றிதழ் முகாம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை ஒத்த கருத்துடையவர்களையும், மாணவர்களையும் திரட்டி, எப்போது முகாம் நடத்தினாலும் போராடுவோம். இந்த புதிய நடைமுறையை அரசு நீக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT