உடனடிச்செய்திகள்

Wednesday, September 25, 2019

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!
தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ள தமிழ் தெரியாத வடநாட்டுக்காரரை உடனே மாற்ற வேண்டுமெனக் கோரி, இன்று (25.09.2019) செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வங்கி - அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்து இந்திய அரசுப் பணிகளிலும் தமிழே தெரியாத இந்திக்காரர்களை பணியமர்த்தி வரும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாயர் தோழர் பி. தென்னவன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு தோழர் ரெ. கருணாநிதி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் இலெட்சுமணன், நாம் தமிழர் கட்சி பூதலூர் ஒன்றியச் செயலாளர் திரு. அற்புதராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். நிறைவில், தோழர் ச. செந்தமிழன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும் பேரியக்கத் தோழர்களும் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT