உடனடிச்செய்திகள்

Sunday, July 31, 2016

இந்திய அரசே! காசுமீரிகள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துக! கண்டனப் போராட்டங்கள்




இந்திய அரசே! காசுமீரிகள் மீதான
தாக்குதலை உடனே நிறுத்துக!

கண்டனப் போராட்டங்கள்


காசுமீரில் வெறியாட்டம் நிகழ்த்தி வரும் இந்திய அரசைக் கண்டித்து, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று (29.07.2016) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா முதன்மைச்சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ. இராசு தலைமை தாங்கிப் பேசினார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முழக்கங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். பேரியக்க தோழர் மூ. கருப்பையா, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சு. அருணாச்சலம், எஸ்.டி.பி.ஐ. மதுரை மாவட்டச் செயாளர் திரு. அப்துல் காதர், தமிழர் தேசிய முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் வெ. கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் பே. மேரி, பேரியக்கத்தோழர் கதிர்நிலவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நுங்கம்பாக்கம்
---------------------------
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், கடந்த 21.07.2016 அன்று, காசுமீரில் வன்முறையில் ஈடுபட்டு வரும் இந்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. அப்துல் சமது, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மா.லெ. மக்கள் விடுதலை தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சதீசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தோழர்கள் சாமி, ஏந்தல் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
அம்பத்தூர்
-----------------------
28.07.2016 அன்று, அம்பத்தூரில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில், அதன் முன்னணித் தோழர் “மானிடமனம்” சேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரமூர்த்தி, மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், இந்திய தவ்கீத் சமாத் தலைவர் திரு. எஸ்.எம். பாக்கர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கப் பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன் பங்கேற்றுக் கண்டனவுரையாற்றினார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், ஏந்தல், செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசே! 
காசுமீரில் வெறியாட்டங்களை நிறுத்து!
காசுமீரிகளிடம் பொது வாக்கெடுப்பு நடத்து!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT