உடனடிச்செய்திகள்

Saturday, September 24, 2016

பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும் செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க! பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!


பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும்

செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தலைவர் பெ. மணியரசன்வாழ்த்துச் செய்தி!

பாறையைப் பிளந்து கொண்டு விதைமுளைப்பது போல், தமிழினஒடுக்குமுறைகளைப் பிளந்து கொண்டு“தமிழ் மக்கள் பேரவை” உருவாகியிருப்பது,உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சம்குளிரும் செய்தியாகும்.

பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும்வெகு மக்களை ஒருங்கிணைத்துக்கொண்டு கூட்டுத் தலைமையின் கீழ்உருவாக்கியிருக்கும் “தமிழ் மக்கள்பேரவை”க்கு தமிழ்த் தேசியப்பேரியக்கத்தின் சார்பில் மனம் நிறைந்தவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இலங்கை அரசாங்கத்தின் தமிழர்விரோதப்போக்குகளை ஈழத்தில் வாழும்தமிழ் மக்கள் புரிந்து கொண்டு, “தமிழ்மக்கள் பேரவை”யால் முன்னெடுக்கப்படும்எழுக தமிழ் பேரணியில், தமிழ் சொந்தங்கள் பங்கெடுக்க வேண்டியது ஒவ்வொருதமிழரதும் வரலாற்றுக் கடமையாகும்.
தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்களப்படையாட்கள் போர் முடிந்த நிலையில்,கடந்த ஏழாண்டுகளாகத் தமிழர்களின்விளை நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டும், வீடுகளை வன்கவர்தல்செய்தும் புதிய வகையில் இன அழிப்புப்போரைத் தொடர்கின்றனர். இராசபட்சேஆட்சியில் நடந்த அதே சிங்களப்படையின்வன்கவர்தல்களும் ஆக்கிரமிப்புகளும்மைத்திரி – ரணில் ஆட்சியிலும்தொடர்கின்றன.
ஈழத்தின் அதிகரித்த ராணுவ பிரசன்னம்காரணமாக மக்களின் சுதந்திரமானநடமாட்டம் பாதிக்கப்பட்டிருப்பதோடுகுடியியல் (சிவில்) நிகழ்வுகளில்இராணுவத்தின் தலைகீடும் நெருக்கடியும்தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேற்கண்ட இராணுவ ஆக்கிரமிப்புகள்அனைத்தும் விலக்கப்பட்டு தமிழர்களின்பகுதியிலிருந்து இராணுவ முகாம்கள்திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற தமிழ்மக்கள் பேரவையின் கோரிக்கை உலகஅரங்கில் ஏற்கப்பட வேண்டிய மனிதஉரிமை நீதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களைஇராணுவமயமாக்கிக் கொண்டுள்ளஅதேவேளை அவற்றில் சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுத் திணித்துதமிழர் தாயக அழிப்பு வேலையை சிங்களஅரசு இன்றும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழர்தாயகம் என்ற அடிப்படை உரிமையைப்பறிக்கும் வகையில் சிங்களர்களைமைத்திரி – ரணில் அரசு குடியேற்றிக்கொண்டுள்ளது.
இந்து மற்றும் கிருஸ்தவ, இசுலாம்மதங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின்தாயகத்தில் சிங்கள பௌத்தகோயில்களைப் புதிது புதிதாக எழுப்பிக்கொண்டுள்ளார்கள். இந்துக் கோயில்களில்புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்.இவ்வாறான தமிழர் ஆன்மிக அழிப்புநடவடிக்கைகளை மைத்திரி – ரணில் அரசுஉடனடியாகக் கைவிட வேண்டும்.
போர்க்காலத்தில் நடந்த தமிழினப்படுகொலைக் குற்றங்கள், காணாமல்போன தமிழர்கள் என்ற தலைப்பில்அழிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்கள் –அதற்கான பொறுப்பாளிகள் ஆகியவற்றைவிசாரித்து, நடந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர - குற்றவாளிகளைத்தண்டிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம்உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
“தமிழ் மக்கள் பேரவை” – நாளை (24.09.2016)காரி(சனி)க்கிழமை யாழ்ப்பாணத்தில்நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும்“எழுக தமிழ்” பேரணி, தமிழர் அரசியல்செயல்பாட்டில் புதுக்குருதி பாய்ச்சும் என்றுஉறுதியாக நம்புகிறோம்.
இப்படிப்பட்ட வடிவிலான மக்கள் அமைப்பும்,மக்கள் திரள் போராட்டங்களும்தான்தமிழர்களுக்கான உண்மையான –உறுதியான அரசியல் தலைமையைஉருவாக்கும். தற்சமயம் தமிழீழத்தில்சிங்கள ஆட்சியாளர்களின் அரவணைப்பில்வலம் வந்து கொண்டிருக்கும் கங்காணித்தலைமைகளைப் புறந்தள்ளும்.
கூட்டுத் தலைமையில் சனநாயகஉள்ளடக்கத்தோடும் சமூகப் பன்மைகளைஏற்கும் உளவியலோடும்உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மக்கள்பேரவை”யின் பேரணியில், பல இலட்சம்தமிழ் மக்கள் கலந்து கொண்டு உலகத்தின்கவனத்தை ஈர்க்க வேண்டும். உலகம்வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியல் திறன் காட்டிசாதனை செய்வார்கள் என்ற நம்பிக்கைஎமக்கிருக்கிறது.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT