உடனடிச்செய்திகள்

Friday, December 2, 2011

முல்லைப் பெரியாறு அணை உரிமைக் காப்போம் - நாளை மதுரையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாப்போம்

நாளை மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

 

தமிழினத்திற்கு எதிரான கலவரப் பகுதியாகக் கேரளத்தை மாற்றுவதற்குக்  கேரள அரசும், மலையாள அரசியல் கட்சிகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும், பேரழிவை ஏற்படுத்திவிடும்  என மலையாளிகளிடையே பீதியைப் பரப்பிவருகிறார்கள்.  எப்படியும் முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிடுவது என்ற சதி நோக்கத்தோடு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.

 

                இதற்கு வாய்ப்பாக அண்மையில் இடுக்கியில் நிகழ்ந்த 2.3ரிக்டர் அளவு நில அதிர்வைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாக 1963லிருந்தே கேரள அரசும் மலையாள அரசியல்வாதிகளும் தொடர் பொய்ப் பரப்புரை நடத்தி வருகின்றனர்.  2001ல் இதே இடுக்கியில் இப்போது நிகழ்ந்ததைவிட இரண்டு மடங்கு வலுவுள்ள அதாவது 4.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் வந்தபோது உடனடியாக ஆய்வு செய்த இந்திய அரசின் நீர்ப்பாசன ஆணையர், அணை வலுவாக இருப்பதாகச் சான்று வழங்கினார்.

 

                இந்திய உச்சநீதி மன்றம் சார்பற்ற வல்லுநர் குழுவை நியமித்து அணை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை பெற்று அதனடிப்படையில் 27.02.2006ல் அளித்த தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உறுதி செய்து 142அடி தண்ணீரை உடனடியாகத் தேக்குமாறு ஆணையிட்டது. இந்த ஆண்டு சனவரி 20ல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழுவும் அணை வலுவாக இருப்பதாகச் சான்று அளித்தது.

 

இத்தனைக்குப் பிறகும் தமிழினப் பகை வெறியோடு கேரள அரசும் அம்மாநில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து பொய்ப் பரப்புரை செய்து வருகின்றன.  அணையை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கடையடைப்புகள், பேரணிகள் நடத்தி வருகின்றன.  தமிழகத்திலிருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட தமிழர்களை மலையாளிகள் தாக்கி வருகின்றனர். தமிழ்நாடு பதிவு எண் உள்ள வாகனங்கள் தாக்கப்படுகின்றன. இடுக்கியில் வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களும் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 

                அதே நேரம் கேரளமோ அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்தே உள்ளது.  கேரளத்தின் உணவுத் தேவைக்கு நாள்தோறும் 700 டன் தமிழக அரிசி செல்கிறது. கேரளத்தின் இறைச்சித் தேவை முழுவதையும் தமிழகமே நிறைவு செய்கிறது. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்குக் கேரளம் பெரிதும் தமிழகத்தையே சார்ந்துள்ளது. கேரளத்து மலையாளிகளின் வானுயர்ந்த கட்டிடங்களுக்குத் தமிழகத்து மணலே கொள்ளை கொள்ளையாக எடுத்துச் செல்லப்படுகிறது. 

 

 தமிழகத்தில் 30 இலட்சம் மலையாளிகள் செல்வச் செழிப்போடும் உயர் அதிகாரப் பதவியிலும் வாழ்ந்து வருகின்றனர். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளது போல் (தினமணி 30.11.2011) ஒரு நபருக்குச் சராசரியாக 1700 கனமீட்டர் வீதம் 30 இலட்சம் மலையாளிகள் ஒரு ஆண்டில் பயன்படுத்தும் தமிழ்நாட்டுத் தண்ணீர் 510 கோடி கனமீட்டர். ஆனால் முல்லைப் பெரியாற்றில் நாம் கேட்பது வெறும் 12.6 கோடி கனமீட்டர் தண்ணீர்தான். அரபிக் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரில் இது வெறும் 18.5 விழுக்காடு மட்டுமே. 

 

                முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 35 இலட்சம் மலையாளிகள் அழிந்து விடுவார்கள் என்று எந்த அடிப்படையுமற்ற பொய்யை மீண்டும் மீண்டும் மலையாளத் தலைவர்கள் பரப்பி வருகிறார்கள்.  முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என்பதைப் பலதரப்பு வல்லுநர்களும் மீண்டும் மீண்டும் கூறிவிட்டார்கள்.  ஒரு வேளை அவ்வணைக்குச் சேதம் ஏற்பட்டாலும் அந்த நீர் இடுக்கி அணையில் சேர்ந்து விடுமே அன்றி அழிவை ஏற்படுத்தாது.  முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 10 டிஎம்சி மட்டுமே. ஆனால் இடுக்கி அணையின் கொள்ளளவு 70 டிஎம்சி ஆகும்.

 

எந்த உண்மைச் சான்றும் இன்றி தமிழினப் பகையோடு மலையாள இனவெறியர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கிறார்கள்.  புதிய அணைகட்டப் போவதாகப் பாசாங்கு செய்கிறார்கள்.  மலையாள வெறியர்களின் தமிழினப் பகை நடவடிக்கைக்கு எதிராகப் பதிலடி கொடுக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 

 

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் மலையாளிகளையும், மலையாளிகளின் நிறுவனங்களையும் தமிழகத்திலிருந்து வெளியேற்றுவோம்.  தமிழினப் பகை தேசமான கேரளத்திற்கு எதிராக எல்லைகளை மூடி பொருள் போக்குவரத்தை நிறுத்தி பொருளாதாரத் தடை விதிப்போம். நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து கேரளத்திற்கு நாள்தோறும் செல்லும் 9கோடி யூனிட் மின்சாரத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்துவோம். 

 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(03.12.2011) மாலை மதுரை காலவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், முல்லைப் பெரியாறு அணை நீரால் பாசன வசதி பெறும் உழவர் அமைப்புத் தலைவர்கள் கம்பம் கே.எம்.அப்பாஸ், தேவராசன், பார்த்தசாரதி உள்ளிட்ட தலைவர்களும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்கம் அமைப்பாளர் எம்.ஆர்.மணிக்கம், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், சித்திரை தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் திரு. பா.இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

 

நிறைவாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்துகிறார். இவ்வார்ப்பாட்டத்திற்கு திரளான தமிழ் உணர்வாளர் ளும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  

 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,

வெளியீட்டுப் பிரிவு

 

இடம் : சென்னை

நாள்  : 02.11.2011


PUTHIYATHENRAL said...

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT