உடனடிச்செய்திகள்

Tuesday, February 5, 2013

“இந்தியாவுக்குப் புரிய வைக்க முடியாது – பணிய வைக்க முடியும்” -தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு


“இந்தியாவுக்குப் புரிய வைக்க முடியாது – பணிய வைக்க முடியும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு

சென்னையில், 03.02.2013 அன்று மக்கள் நலவாழ்வு இயக்கம் சார்பில், “தமிழீழ இனப் படுகொலையும் தமிழ சமூகத்தின் கடமையும்” என்ற தலைப்பில், சிறப்புக் கருத்தரங்கம் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை சென்னை இலயோலா கல்லூரிபி.எட்அரங்கம் இசைப்பிரியா நினைவு மேடையில் மூன்று பிரிவுகளாக வெவ்வெறு தலைப்புகளில் நடைப்பெற்றது.

காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை “இலங்கை இனப்படுகொலையும்சர்வதேச சமூகத்தின் தோல்வியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது இக் கருத்தரங்கத்திற்கு, நாம் தமிழர் கட்சி சர்வதேசத் தொடர்பாளர் திரு அய்யநாதன் தலைமையேற்றார். பெரியார் அண்ணா பேரவை திருச்சி திரு கே.செளந்தரராஜன் அவர்கள் இசைப்பிரியா படத்தை திறந்து வைத்தார். மக்கள் நல்வாழ்வு இயக்கம் திரு பொன்.சந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். பேராசிரியர் பால்நியூமென்(பெங்களூர் பல்கலைக்கழகம்) படக்காட்சியுடன் தொடக்க உரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் திரு. சி.மகேந்திரன்திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் திரு. விடுதலை இராஜேந்திரன்மார்க்சியத் திறனாய்வாளர் திரு கோவை ஈசுவரன்தமிழ்த் தேசிய விடுதலை இஅயக்கம் பொதுச் செயலாளர் திரு தியாகுமே பதிணேழு இயக்க ஒருகிணைப்பாளர் திரு திருமுருகன்மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி திரு தமிழேந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக சமர்பா கலைக்குழு திருகுமரன் தமிழீழ எழுச்சிப் பாடல்களை பாடினார்.

மதிய அமர்வு 2.30 மணி முதல் 4.30 மணி வரை “இலங்கை இனப்படுகொலையும்சர்வதேச்சமூகத்தின் ஆதரவைத் திரட்டுதலும்” என்ற தலைப்பில் நடைப்பெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசு நாடாளுமன்ற உறுப்பினர் பேரா.சரஸ்வதி தலைமையேற்றார்மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் திரு ஹென்றிடிபேன் தொடக்க உரையாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் திரு மணிவண்ணன்கீற்று இணையதள ஆசிரியர் திரு இரமேஷ், THE WEEKEND LEADER இணைய இதழ் ஆசிரியர் திரு பி.சி.வினோஜ்குமார்தமிழர் காப்பு இயக்கம் (SAVE TAMILS) ஒருங்கிணைப்பாளர் திரு செந்தில் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாலையில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், “இலங்கை இனப்படுகொலையும்தமிழீழ மக்கள் விடுதலையில் தமிழ்நாடு மற்றும் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் பங்களிப்பும்” என்ற தலைப்பில் நடைப்பெற்றது.

இக்கருத்தருங்கத்திற்கு திரைப்பட இயக்குநர் திரு புகழேந்தி தங்கராஜ் தலைமையேற்றார். மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு கண.குறிஞ்சி தொடக்க உரையாற்றினார். ம.தி.மு.பொதுச் செயலாளர் திரு வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுச் செயலாளர் திரு வேல்முருகன்இந்திய சோசலிச ஜனநாயக கட்சித் தலைவர் திரு. தெஹ்லான் பாகவிகவிஞர் புலமைப்பித்தன்ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நீலவேந்தன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்  தலைமை நிலையச் செயலாளர் தோழர் குமாரதேவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர் பேசும் போது, தமிழீழ விடுதலைக்கானப் போராட்டத்தில் நாம் இன்னும் அரசியல் தெளிவு பெற வேண்டும். கடந்த காலங்களில் எவ்வளவு எழுச்சியாக நடைபெற்றிருந்தாலும், நாம் செய்தப் போராட்டங்கள் வெற்றி பெறவில்லை. இந்திய அரசுக்கு நம் வலியை, புரிய வைக்க முடியாது என்பது தான் இதிலிருந்து நாம் பெறுகின்ற படிப்பினை.

தமிழீழ மக்களுக்கு மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் அனைவருக்குமான எதிரியாக உள்ள இந்திய அரசை, பகை சக்தியாக, எதிரியாக நாம் வரையறுத்துக் கொண்டால் மட்டும் தான், அதற்குப் புரிய வைக்க முடியாது, அதைப் பணிய வைக்கத்தான் முடியும் என்ற தெளிவுக்கு நாம் வர முடியும். போருக்குப் பின்னர் வெளியான பல்வேறு ஆதாரங்களும், ஐ.நா. மன்றக் கூட்டங்களின் போது நடந்த சூழ்ச்சிகளும், இந்திய அரசின் தமிழினப் பகையை, பல்வேறு கட்டங்களில் அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வளவு தெளிவாக தமிழினத்திற்கு எதிராக போர் புரியும் இந்திய அரசை, நமக்கு நட்பாக்கிக் கொள்ளும் முயற்சி ஒருக்காலும் சாத்தியமாகப் போவதில்லை.

எனவே, இந்திய அரசை, அதன் அரசு நிறுவனங்களை தமிழகத்தில் செயல்படவிடாத அளவிற்கு முடக்குகின்ற போராட்டங்களைத் தான் இனி நாம் செய்தாக வேண்டும். அது தான் இன்றைக்குத் தேவை.

ஐ.நா. மன்றத்தில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தமிழீழச் சிக்கலுக்கு அரசியல் தீர்வை முன்மொழியாமல், வெறும் சமஉரிமை – மறுவாழ்வு போன்ற நிவாரணத் திட்டங்களே தீர்மானமாக அமெரிக்காவால் முன்வைக்கப்படும் எனத் தெரிகின்றது. அப்படியான தீர்மானம் வந்தால், இந்திய அரசு கூட அதனை ஆதரிக்கும். அதே கோரிக்கைகளைத் தான், இங்கே டெசோ என்ற பெயரில் அமைப்பு நடத்தி, முன் வைத்துக் கொண்டுள்ளார்கள். அமெரிக்கா – இந்தியா – டெசோ ஆகியவை நேர்கோட்டில் பயணிப்பது இந்தப் புள்ளியில் தான்.

அனைத்துலக நாடுகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அந்தந்த நாடுகள் அவரவர் தேவையை ஒட்டி தான், தமிழீழச் சிக்கலில் நகர்வுகளை மேற் கொள்கின்றனர் என்ற உண்மை வெளிப்படுகின்றது. நமது விடுதலையை வெறும் ஞாயம் என்பதற்காக, யாரும் ஆதாரிப்பதும் இல்லை. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் ஆகிய மூன்று உலக நாடுகளைக் கடந்து நாம் நான்காம் உலக நாடுகளின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டிய நேரமிது.

நம்மைப் போல, நாடற்ற தேசங்களைக் கொண்டு போராடுகின்ற ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களை, நமக்கு நட்பு சக்திகளாக்கிக் கொண்டு, அவர்களுடன் ஒருங்கிணைப்பை பலப்படுத்திக் கொண்டு நாம் முன்னேற வேண்டியக் காலமும் இதுவே. அதற்கு மையமாக, தமிழீழத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குமான ஒருங்கிணைப்பும் அவசியமாக உள்ளது. அதை சாத்தியப்படுத்த உழைப்போம்! என பேசினார்.

திரு ஜார்ஜ்(பூவுலகின் நண்பர்கள்) கருத்தரங்கத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந்தார். கரலொலியுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில், திரு பிரமீதியஸ்(மக்கள் நல்வாழ்வு இயக்கம்) நன்றியுரையாற்றினார். நிகழ்வில், திரளான உணர்வாளர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.



(செய்தி :த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா) 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT