மனிதகுலப்பகைவன் இராசபக்சே வருகைக்கு எதிர்ப்பு:
ஓசூரில் தொடர்வண்டி மறியலில்
ஈடுபட்டோர் மீது காவல்துறை தாக்குதல்
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப் படுகொலையை அரங்கேற்றிய சிங்கள இனவெறி அரசின் அதிபர் இராசபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று 08-02-2013 காலை, ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற, தொடர்வண்டி மறியல் போராட்டத்தின் போது, காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டு, போராட்டத் தோழர்களைத் தாக்கினர்.
போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தமிழக இளைஞர் முன்னணித் தலைவருமான தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தொழிற்சங்ப்பிரிவுத் தலைவர் தோழர் செந்தமிழன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் தோழர் குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்ட அமைப்பாளர் திரு முருகேசன், இளந்துளிர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வடிவேலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தோழர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில், 102 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தின் போது, இராசபக்சேவின் கைக்கூலிகளைப் போல கடுமையாக நடந்து கொண்ட காவல்துறையினர், தோழர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டனர். தாக்குதலில் சில தோழர்களுக்கு காயமும் ஏறபட்டுள்ளது.
சனநாயக வழியில், இராசபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டுள்ள சூழலில், ஓசூர் காவல்துறையினரின் சனநாயக விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தற்போது, தொடர்வண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள அசோக் திருமண நிலையத்தில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1927Uplj8NNU2heY1vM0i5Xkk9jkt5LKhccvpAEhZM3Bh7waK4KXnyaievEGCcfduuIDYJw8OJ8bSGjszUmKDh6RlmmHWYw8MTeTi1PImMgDn6A5h_NdBu2NbdGescsy0VhWMzQqvzD_m/s320/2953_343294945779536_1006797869_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhclkzDXzXhGQHVCcphR6FwFQIGnzwR6rHGcbzzvVYfpev9BKuV8yN62kcwywv5fd3ycLGLWaxYM4FiigkILm32PGLAXjwy21PE-jUZamN4MWaJlQcgGS2q9PgvwFT9QFKfpzYlFgdqxXDS/s320/11793_343294972446200_1506032820_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvIR_NfGyxTrKgunQocXz5aerA1JyKMbjsAh9S7tAEcRBHy_SiRpPerpcn03u0pP_yMkkdzMJYFijM4jcDZhLckjirzUlaCafuXzlFM2jTWjFHK01UjGEdUKie_BtbENp9kveaSGNnhvnY/s320/480737_343294959112868_323560844_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNooqovjqck7okdhK1t9CVT-Lra5B-f6_s0GZUuA8hvG7y42mLqeifIvO9T2cSEm6nDTVSQq_pf1zU8KgsGh6PNJCr-PegBxOVgJpErseOs_BpCYUd_W33fGoIxEoR6vm0JXVU00X3j7V8/s320/48145_343294962446201_1652804107_n.jpg)
தொடர்புக்கு: தோழர் கோ.மாரிமுத்து, 9092812132
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள்: (நன்றி) தினமணி இணையம்)
Post a Comment