ஆர்ப்பாட்டத்தின் போது ஈழத்தமிழாகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்கள் செருப்பு மாலையிடப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு தீ வைத்து எரியுட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 5 பேரை முதலில் காவல்துறை கைது செய்தது.







ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த பின்னர் காவல்துறையினர் பதிவு செய்த ஒளிப்படக்காட்சிகளை பார்த்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் பிடிக்க செங்கிப்பட்டி கிராமம் முழுக்க தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாக புகுந்து அடாவடியில் ஈடுபட்டனா. இறுதியாக 17 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
Post a Comment