உடனடிச்செய்திகள்

Monday, December 22, 2008

கோவையில் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இயக்குநர் சீமான் காரைக் கொளுத்திய காங்கிரசாரைக் கைது செய்யக் கோரி கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் முன்பு இன்று(19.12.2008) மதியம் 1 மணியளவில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, சீமான் காருக்கு தீவைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், தலைமைக் கழக உறுப்பினர் தோழர் வெ.ஆறுச்சாமி , தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ந.பன்னீர்செல்வம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை அமைப்பாளர் தமிழரசன் உட்பட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT