உடனடிச்செய்திகள்

Tuesday, December 23, 2008

சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பெசியதாகக் கைது செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் தமிழக அரசின் இக்கைது நடவடிக்கையை கண்டித்தும் சிதம்பரம் மெல வீதியில் 20-12-2008 அன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.



இவ்வார்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். பெரந்திரளான தமிழ் உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT