உடனடிச்செய்திகள்

Monday, December 22, 2008

ஈரோட்டில் கண்டன போராட்டம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோரின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.



அதன் ஒருபகுதியாக ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இராம.இளங்கோவன் தலைமையில் 21-12-2008 அன்று கோபி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தத. அதில் கலந்து கொண்டு உணர்ச்சி முழக்கமிட்டத் தோழர்கள் 60 க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT